Skip to main content

“கலைஞரின் பேனா பலரை உயரத்துக்கு கொண்டு வந்தது” - தமிழிசை

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

"The kalaignar pen has brought many to heights" - Tamilisai

 

“கலைஞர் நிச்சயமாக உயரமான எண்ணங்களை உடையவர். அவரது பேனா பலபேரை உயரத்துக்கு கொண்டு வந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

 

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, “காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்றில் இருந்து 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது வெயில் காலமாக இருப்பதால் மதியம் வெளியில் செல்வதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். நமக்கு சளி, காய்ச்சல் தொல்லைகள் இருந்தால் நாம் வீட்டில் இருப்பது நல்லது. பொது இடங்களில் இப்போது கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கிறோம். மீண்டும் அந்த கட்டுப்பாடுகள் வந்தால் நன்றாக இருக்கும். 

 

உயரமான சிலைக்கு உதாரணமாக வல்லபாய் படேல் சிலை உள்ளது. அந்த சிலை வைக்கும் போது சில விமர்சனங்கள் வந்தாலும் கூட எல்லோரும் ஒரு முறையாவது அந்த சிலையை பார்க்க வேண்டும். சிலையை சுற்றி 7 கிலோமீட்டருக்கு தெரிகிறது என்பது மட்டுமல்ல. அது பழங்குடியின மக்களுக்கு எவ்வளவு வாய்ப்புகளை தருகிறது. நமக்கு எவ்வளவு வருமானத்தை ஈட்டித் தருகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் பொறியியல் அற்புதத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பது வல்லபாய் படேலின் சிலை. 

 

கலைஞர் நிச்சயமாக உயரமான எண்ணங்களை உடையவர். அவரது பேனா பலபேரை உயரத்துக்கு கொண்டு வந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பேனா சிலையை வைத்து தான் அவரை அடையாளப்படுத்த வேண்டும் என்பது இல்லை. அவரது எழுத்துகள் தான் அவருக்கு அடையாளம். அவரது எழுத்துகளை படிப்பது தான் அவருக்கு அடையாளம். பேனா சிலை மட்டும் அவருக்கு அடையாளமாக இருக்குமா என நான் நினைக்கவில்லை. கலைஞரின் ஒவ்வொரு எழுத்துகளும் மதிக்கப்பட வேண்டியது தான். நான் வேறு கொள்கை உடையவளாக இருந்தாலும் என்றுமே கலைஞரின் எழுத்துகள் மீது எனக்கு மரியாதை உண்டு” எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தொகுதிக்கு எதுவும் செய்யலன்னா கல்லால் கூட என்னை அடிங்க' - தமிழிசை பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
'Hit me even with a stone if you don't do anything for the constituency'-Tamil campaign

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.