Skip to main content

“நீங்க செஞ்ச தப்புக்கு ஆறு தலைமுறை ஜெயில்ல இருக்கணும்..” - மு.க.ஸ்டாலினுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி பதிலடி!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020
rrr

 

சும்மாவே ஆடுற காலுல சலங்கையைக் கட்டிவிட்டா கேட்கவா வேணும்? அப்படி ஒரு வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் விடுவாரா கே.டி.ராஜேந்திரபாலாஜி?  

 

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். “ஒரு அமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் ராஜேந்திரபாலாஜி” என்று ‘தமிழகம் மீட்போம்’ உரையில் அவர் வெளுத்துக்கட்ட, கே.டி.ராஜேந்திரபாலாஜியும் பதிலடி தந்திருக்கிறார்.  

 

“சங்கரலிங்க நாடாருக்கு என்ன பண்ணுனாங்க தி.மு.க ஆட்சியில்? ஒரு மணிமண்டபம் கட்டினாங்களா விருதுநகர்ல? ஒரு சிலை வச்சாங்களா? முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா, எட்டு வருஷத்துக்கு முன்னால நான் செய்தித்துறை மந்திரியா இருக்கும்போது, தியாகி சங்கரலிங்க நாடாருக்கு வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் எழுப்பினாரு. சங்கரலிங்க நாடாரின் தியாகத்தைப் போற்றிய தலைவி அவர். யாரு யாரைப் பற்றி பேசுவது? 

 

காமராஜர் பிறந்த பூமியில் என்று இவர் சொல்லக்கூடாது. பெருந்தலைவர் காமராஜரை தோற்கடிப்பதற்காக வீதிவீதியாகப் பிரச்சாரம் பண்ணுனவரு கலைஞர். விருதுநகருக்காரங்க நாங்க அதை மறக்கல. மானமுள்ள மண்ணு விருதுநகர் மண்ணு.. சிவகாசி மண்ணு. நீங்க யோக்கியம்னா.. உங்களுக்கு ஏது இவ்வளவு பணம்? உங்களை விளம்பரப்படுத்துறதுக்கு.. பீகார் வாத்தியாருகிட்ட 350 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கீங்க. 

 

என்னய்யா இது? அண்ணா வளர்த்த தி.மு.க எப்படிப்பட்ட கட்சி! தெருவுல நின்னு போராடிக்கிட்டு இருந்த திமுகவை, இன்னைக்கு கம்ப்யூட்டர் ரூம்ல கொண்டுபோயி வச்சிட்டாரு. நீங்கள்லாம் நினைப்பீங்க. குறிப்பே இல்லாம படிக்கிறாருன்னு. குறிப்பே இல்லாம.. துண்டுச்சீட்டு இல்லாம அவரால ஒருக்காலும் படிக்க முடியாது. 

 

எல்லாரும் ஜெயிலுக்குப் போயிருவோம்னு சொல்லுறீங்க. எங்கள மிரட்டுறீங்களா? நீங்க என்ன சர்வாதிகாரியா? சதாம் உசேனா? சதாம் உசேன் என்ன கதியானாருன்னு தெரியுமா உங்களுக்கு? நீங்க முதலமைச்சரா என்னைக்கு ஆகப் போறீங்க? நீங்க என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா? நீங்களே சொல்லுறீங்க.. கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஒரு கேஸுக்கு ஒரு வருஷம்னாலும்.. ஆயுள் முழுக்க ஜெயில்ல இருக்கணும்னு. நீங்க செஞ்ச தப்புக்கு ஆறு தலைமுறை ஜெயில்ல இருக்கணும். 

 

cnc

 

தி.மு.க ஆட்சியில அடிச்ச கொள்ளை எத்தனை? அண்ணா நகர் ரமேஷ் செத்த கொலை கேஸை எல்லாம் இப்ப நாங்க எடுக்கப்போறோம். குடும்பத்தோடு கொலை பண்ணிட்டு.. எப்படி செத்தாங்க.. பதில் சொல்லுங்க. எத்தனை பேரு செத்தாங்க? அடுத்து யாரும் சினிமா எடுக்க முடியாது. படம் எடுத்தா தியேட்டர் கொடுக்க மாட்டாங்க. தியேட்டர் கொடுத்தா ஓட விடமாட்டாங்க. கலகம் பண்ணுவாங்க. 100 கோடிக்கு படம் எடுத்தா.. 50 கோடிக்கோ.. 30 கோடிக்கோ.. இவங்க கேட்ட விலைக்குக் கொடுத்துட்டுப் போயிரணும். இவங்க குடும்பம் மட்டும்தான் படம் எடுக்கணும். வேற யாரும் பெரிய லெவல்ல பில்டிங் கட்ட முடியாது. கட்டினா அந்த பில்டிங்கை விலைக்கு வாங்கிருவாங்க. இல்லைன்னா.. அண்ணன் விருப்பப்படறாரு.. கொடுங்கம்பாங்க. எடப்பாடியார் ஆட்சியில கட்டப் பஞ்சாயத்து இருக்கா? அம்மாவோட ஆட்சியில கட்டப் பஞ்சாயத்து இருக்கா?” என்று சரவெடியாய் வெடித்துவிட்டார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.