Skip to main content

“வேண்டுமென்றே தமிழகத்தை போராட்ட களமாக்குகிறார்கள்!”- தமிழக கட்சிகள் மீது தமிழிசை காட்டம்!

Published on 07/03/2018 | Edited on 07/03/2018
sivakasi


விருதுநகர் மாவட்டம் – ராஜபாளையத்தில்,  பாரதிய ஜனதா கட்சி – மகாசக்தி கேந்திரம், சக்தி கேந்திரம் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்ற வந்திருந்த அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், செய்தியாளர்களை சந்தித்தபோது, 

“பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வன்முறை மற்றும் சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபட கூடாது என்று பதிவு செய்துள்ளார். பா.ஜ.க. எந்த வகையிலும் வன்முறையை ஊக்குவிக்கும் கட்சி அல்ல.” என்றார்.  அடுத்து, சிவகாசி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த தமிழிசை சௌந்தர்ராஜன்,

“ஆக்கபூர்வமான அரசியலுக்கு தமிழகம் வழிவகை செய்ய வேண்டும். என்பதுதான் பா.ஜ.க.வின் விருப்பம்.  வளர்ச்சியை நோக்கி தமிழக அரசியல் செல்ல வேண்டுமே தவிர, கிளர்ச்சியை நோக்கி செல்லக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கம். தமிழகம் உணர்ச்சிக்களமாக, போராட்டகளமாக இருந்துவிடக் கூடாது என்பதுவும் எங்களது நோக்கம். இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் எந்தவிதத்திலும் விரும்பக்கூடிய சம்பவங்கள் அல்ல. எந்தக் கொள்கை உடையவர்களாக இருந்தாலும், எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை மதிக்கக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், அவர்கள் இந்த சமுதாயத்துக்கு செய்திருக்கும் பங்களிப்பை, எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடாத கட்சி பாரதிய ஜனதா கட்சி.

நேற்றைய தினம் எச்.ராஜா ஒரு பதிவு போட்டிருந்தார். அவர் போடவில்லை. அவர் சார்பாக போடப்பட்டது என்ற தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பதிவு நீக்கப்பட்டிருப்பதோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கோரியிருக்கிறார் எச்.ராஜா. அதனால், அதை ஏற்றுக்கொண்டு மறுபடியும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பதுதான் பா.ஜ.க.வின் கருத்தாக இருக்கிறது. சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபட்டால், உடனே அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறோம். இன்று அதிகாலையிலேயே, சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பத்தூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துராமன் அவர்களை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறேன். ஆகவே, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு முத்துராமனின் நீக்கம் ஒரு செய்தியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், எல்லாம் மன்னிப்பு கேட்ட பின்னும் தமிழகத்தை வேண்டுமென்றே  ஒரு போராட்ட களமாக மற்ற கட்சிகள் எடுத்துச் செல்லக்கூடாது என்பது எனது கோரிக்கையாக இருக்கிறது.” என்று சொன்னபோது நாம் இடைமறித்தோம். 

‘தமிழை ஆண்டாள் கட்டுரையை சர்ச்சை ஆக்கியது இதே எச்.ராஜாதான். கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும்,  தமிழகமெங்கும் போராட்டம் நடத்தியதன் பின்னணியில் இருந்தது பா.ஜ.க.தான். தமிழகம் போராட்ட களமாகக் கூடாது என்று இப்போது சொல்கின்றீர்கள். எச்.ராஜாவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள். இந்த கரிசனம் வைரமுத்து விவகாரத்தில் வெளிப்படவில்லையே?’ என்று கேட்டோம். அதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் “ஆண்டாள் விவகாரத்தை பா.ஜ.க. முன்னெடுத்துச் செல்லவில்லை. மக்களே முன்னெடுத்துச் சென்றார்கள். நீங்கள் வேண்டுமென்றால் சரிபார்த்துக் கொள்ளலாம். பா.ஜ.க. எந்த ஒரு போராட்டத்தையும் முன்னின்று நடத்தவில்லை.” என்றபோது, ‘ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜீயர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததே எச்.ராஜாவும், நடிகர் எஸ்.வி.சேகரும்தானே? அவர்கள் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள்தானே?’ என்றோம். உடனே, தமிழிசை “கட்சி ரீதியாக, அதிகாரபூர்வமாக அப்படி ஒரு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடவில்லை.“ என்று சமாளித்தார்.

‘பெரியார் சிலையை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுத்தது சரிதான். ஆனால், அதற்கு தூண்டுதலாக இருந்த எச்.ராஜாவின் பதிவு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?’ என்று கேட்டபோது, “எச்.ராஜா தான் பதிவு போடவில்லை என்றிருக்கிறார். மன்னிப்பும் கேட்டிருக்கிறார். சிலை உடைத்தவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறோம்.” என்று முடித்துக்கொண்டார்.

கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பா.ஜ.க. தொண்டர் ஒருவர் நம்மிடம் “என்ன சார்? எச்.ராஜா மீது நடவடிக்கை பாயவில்லையே? என்பதுதானே உங்கள் கேள்வி! இந்தம்மா மாநில தலைவர். எச்.ராஜாவோ பா.ஜ.க. கட்சியின் தேசிய செயலர். எச்.ராஜா பேசுறது எல்லாமே தப்புன்னு தமிழிசைக்கு தெரியும்.  ஆனாலும்,  அவரை இவரால் என்ன பண்ண முடியும்?” என்று நொந்துகொண்டார். 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணா, பெரியார் குறித்து பேச்சு; இவர்களை தூண்டிவிடுவது யார்? - வழக்கறிஞர் பாலு விளக்கம்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

 Advocate V Balu | Anna | Periyar | Annamalai | H Raja | BJP

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் வே.பாலு  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அண்ணா குறித்தான விவகாரத்தில் அ.தி.மு.க. அமைதியாக சென்றதற்கு அண்ணாமலை சொன்ன விஜிலன்ஸ் இருக்கிறது என்றதும் காரணம். சமீபத்தில், பாஜகவினர் சிலர் உதயநிதி கருத்திற்கு நாக்கை அறுக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தனர். அதற்கு, அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது, நான் அண்ணாமலையை பாராட்டினேன். ஆனால், மீண்டும் சில நாட்களிலே வேறொரு பிரச்சனையை அவர் கிளப்பியுள்ளார். சனாதன சர்ச்சையில் கூட உதயநிதி கூறாத ஒன்றை வைத்து மோடியும், அமித்ஷா போன்றோர் விமர்சித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக வருகிற தேர்தலில் சனாதனத்தை மையப்படுத்தி தான் எதிர்கொள்ளவிருகிறார்கள். சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் ஆதி சங்கரர் அவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கு, செய்தித் தாளில் எட்டு பக்கம் விளம்பரம் கொடுத்திருந்தனர். அதில், "சனாதனத்தை காப்போம் " எனவும் குறிப்பிட்டிருந்தனர். அண்ணாமலை இந்த பாணியில் பேசுவதற்கு காரணமே சுப்ரமணிய சாமி போன்றோரின் தொடக்கம் தான். 

 

இவ்வளவு, ஏன் இதே சுப்ரமணிய சாமி, ரங்கராஜன் நரசிம்மன் பாஜகவை சில நேரங்களில் விமர்சித்தனர். அதற்கெல்லாம், அண்ணாமலை மண்புழு அளவிற்கு கூட எதிர்வினையாற்றவில்லை. எனவே, இதனையெல்லாம் பற்றி பேசாத அண்ணாமலை, ஏன் தேவரை தற்போது பேசுகிறார். இதற்கு முக்கிய காரணம், தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சாதிகளை தன்வயப்படுத்த திட்டமிடுகிறார்கள். இதற்கு முன் ஜெயலலிதாவை கூட தேவரின பெண்ணாக பாவித்த விசயங்களும் நடந்துள்ளது.  

 

முத்துராமலிங்கத் தேவர் போன்றவரை மேடையில் வைத்து "அவர் அண்ணாவிற்கு எதிராக பேசிவிட்டார்" என சொல்கிறார்கள். அன்று நடந்த அந்த விழாவில் அண்ணாவின் கருத்தும் முத்துராமலிங்க தேவரின் கருத்தும் சற்று வேறுபட்டவை. எனவே, பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு அந்த கூட்டம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதனை விளக்கி தற்போது தமிழ் ஹிந்து பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டது. ஏன், இரு திராவிடக் கட்சிகளிலும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை கணிசமாக இடம்பெற வைத்துள்ளது. மேலும், அந்தப் பிரிவினர் இரண்டறக் கலந்து இரு கட்சிகளும் செயல்பட்டு வருகிறார்கள். இதில், அண்ணாமலைக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை. 

 

மேலும், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களை குறித்து பேசியதால் இன்றைய தலைமுறைகள் அவர்களைப் பற்றி படிப்பதற்கு எளிய வழியை அண்ணாமலை உருவாக்கிவிட்டார். அண்ணாதுரை என்பவர் தி.க.வில், இருந்து தி.மு.கவைத் தொடங்கினார். அவர் வாழ்நாளில் பல கருத்துகளையும் விமர்சனங்களையும் வைத்து வந்துள்ளார். கம்ப ராமாயணத்தை விமர்சித்து "கம்பரசம்" எனவும் புத்தகம் வெளியிட்டார். எனவே, இதனை வைத்து அந்த காலத்தில் எதிர்க்கருத்து கொண்ட மக்கள் இருந்ததை நாம் அறியலாம். ஆனால், இன்றைக்கு பா.ஜ.க. கலவரத்தைத் தூண்டவே எதிர்பார்க்கிறது. 

 

சமீபத்தில் கூட மணிப்பூரில் ஒரு ராணுவ வீரர் சுடப்பட்டார். இன்று வரை அங்கு கலவரம் முடிவிற்கு வரவில்லை. அதனைக் குறித்து அண்ணாமலை ஒருபோதும் பேசுவதில்லை. மாறாக, தினம் தினம் சனாதனம், உதயநிதி என பேசி பக்குவமில்லை என்பதை நிரூபிக்கிறார். இதற்கு காரணம் ,"மூன்று சதவிகித ஆட்கள் சவுகரியமாக இருக்க. 97% சதவித மக்கள் சண்டையிட்டுக் கொள்ள" இது போன்று நடந்துகொள்கிறார்கள். அண்ணாமலை ஒரு போதும் அவர்களின் தலைவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. தொடர்ந்து, காமராஜர்,கக்கன், தேவர், அடுத்து பெரியார் என்று தான் பேசுகிறார்கள். இறுதியாக சொல்ல வருவது, "அண்ணாமலை தான் தலைவராகி விட்டோம் என்ற தலைக்கனத்தில்" வந்த கருத்து தான் இது.

 

அண்ணாமலை சில நிர்ப்பந்தங்கள் அடிப்படையில் தான் இது போன்று பேசிவருகிறார். காரணம் எஸ்.வீ.சேகர், எச்.ராஜா போன்றோர்களின் காய் நகர்த்தலாக இருக்கலாம். ஏனென்றால், அண்ணாமலையை தமிழ் மக்களுக்கு எதிரியாக மாற்றவும் திட்டம் உள்ளது. அண்ணாமலையும் பெரியார் குறித்து இழிவாக இதுவரை பேசியதில்லை. சென்ற வாரம் எச்.ராஜா பெரியாரை அவன் இவன் என்றெல்லாம் பேசியுள்ளார். இளம் தலைமுறைக்கு நான் சொல்ல வருவது, "உலகின் பல தலைவர்கள் தங்கள் சுயசரிதையில், தாங்கள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல தான் பெரியாரும் செய்தார். எனவே, இதற்கெல்லாம் ஒரு மன தைரியம் வேண்டும்" என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

 

இதெல்லாம் நேர்மையின், அறத்தின் பால் சார்ந்தது. தான் செய்த அனைத்து நல்லது கெட்டதுகளையும் ஒருவர் பதிவிட்டால் அதனை இழிவு படுத்துகிறீர்கள். இதுவே, கண்ணதாசன் செய்தால் அவரை கவிஞர் என்கிறார்கள். இவர்களைப் போன்று பல எழுத்தாளர்கள் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளனர். அது ஒரு மனித மரபு என்பதை உணர வேண்டும். இதெல்லாம் தெரியாமல் பெரியாரை மிருகம் என சொல்பவர்கள்,"நிச்சயம் மிருகத்திற்கு பிறந்தவர்களாகத் தான்" இருப்பார்கள். நான் சொல்கிறேன்,“இது போன்று சில்லூண்டி மனிதர்களை கோவிலினுள் அழைத்துச் சென்றது தான் பெரியார் செய்த மிகப்பெரிய தவறு”. அதே சமயம் பெரியார் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாடுபட்டவர். அவரைக் குறித்து பேசுவதுதான் என்னை கோபமடைய செய்கிறது. அதேசமயம் இவர்கள் ஏன் தமிழ்நாட்டை பற்றி மட்டும் பேசுகிறார்கள். பிற மாநிலங்களை கவனிக்கவில்லை? இதற்கு காரணம் அவர்கள் நம் தமிழ்நாட்டு மக்களின் சித்தாந்தங்களை உடைக்கவே திட்டமிடுகிறார்கள். இந்த வேலையை செய்யத்தான் அண்ணாமலையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். 

 

அண்ணாமலை, தமிழிசை போன்றவர்கள் பாஜகவில் சேர்ந்து தங்களின் அதிகாரத்தை பயன்படுத்த சொந்த மக்களுக்கு எதிராக செயல்படுவதில் எனக்கு மன வருத்தம் தான். இன்றைக்கு உதயநிதி பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாகி அனைவரும் அது குறித்து வாசிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, இதெல்லாம் ஆரோக்கியமான விவாதமாக இருந்தால் நல்லது. அதேபோன்று அண்ணாமலையிடம் கொஞ்சம் பக்குவம், நாகரீகம் , அறம், அன்பு, அரவணைப்பு, பணிவு, போன்றவை வேண்டும். இவையெல்லாம் ஒன்றிணைந்தால் தான் துணிவிற்கு அர்த்தம் இருக்கும். இதனால், அண்ணாமலை இது போன்று பிரச்சனைகளில் சிக்க வேண்டாம். இறுதியாக, “எத்தனை முறை தமிழர்களை சீண்டிப் பார்த்தாலும் அவர்களின் பண்பை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது". ஏனென்றால் தமிழன் என்பது ஒரு தத்துவம்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

Next Story

காட்டுமிராண்டிகளா இவர்கள்? தொடைநடுங்கிகள்! - விளாசும் திருமுருகன் காந்தி

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 Thirumurugan Gandhi Interview

 

சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பகிர்ந்து கொள்கிறார்.

 

அரசியலில் கோபம் இருக்கலாம். ஆனால் கண்ணியக் குறைவு எப்போதும் இருக்கக்கூடாது. தலைக்கு விலை வைக்கும் வேலையை இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் என்ன காட்டுமிராண்டிங்களா? யாராவது விமர்சனம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்கும் தொடை நடுங்கிகள் தான் இவர்கள். பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலரை இதுபோன்று சிறையில் அடைத்துள்ளன உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிர மாநில பாஜக அரசுகள். இவர்கள் கருத்தியல் ரீதியாக உரையாடுவதாக இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கலாம். தலைக்கு விலை வைப்பதாக இருந்தால் வடமாநிலம் சென்றுவிடலாம். 

 

தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். சனாதன எதிர்ப்பு பற்றி உதயநிதி ஸ்டாலின் மட்டும் பேசவில்லை. அவருக்கு முன்பு பலரும் அதைப் பேசியுள்ளனர். சனாதனம் பின்பற்றப்பட்டிருந்தால், இன்று உதயநிதிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மேடையேறி இருக்கவே முடியாது. உத்தரப்பிரதேச சாமியாரின் பேச்சை எதிர்க்கும் அண்ணாமலை, ஜனநாயகவாதி போல் நடிக்கிறார். அவருடைய கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல. 

 

வட மாநிலத்தில் செய்யும் அரசியலை பாஜக இங்கு செய்தால் அது எடுபடாது. தமிழர்கள் படித்தவர்கள். உமா ஆனந்தனை இன்னும் ஏன் இந்த அரசு கைது செய்யவில்லை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர் உதயநிதி. அவருடைய தலையை வெட்ட வேண்டும் என்கிற கருத்தை ஆதரித்து பேசுகிறார் உமா ஆனந்தன். இப்படி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது இவர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். சனாதனம் என்பது மக்களைக் குறிக்கும் சொல் அல்ல. சனாதனம் என்கிற வார்த்தையை இந்துக்கள் பயன்படுத்துவதில்லை. 

 

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது போல, இந்து மதத்தின் பெயரை சனாதனம் என்று இவர்களால் மாற்ற முடியுமா? தலையை வெட்டுவேன், நாக்கைப் பிடுங்குவேன், கண்ணை நோண்டுவேன் என்று பேசி வரும் இவர்கள் காட்டுமிராண்டிகள் தான். உலகின் எந்த நாட்டிலும் இவ்வாறு அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை. இவை அனைத்தையும் திமுக அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கீழ்த்தரமாக பேசும் நபர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை மோசமாகும்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...