Skip to main content

“அம்பேத்கருடைய கனவு நனவாக வேண்டுமெனில் முதலில் இந்த ஆளுநரை வெளியேற்ற வேண்டும்” - வைகோ பேட்டி

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

"If you want to commemorate Ambedkar's dream, you should expel the governor" - Vaiko interview

 

சட்டமேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவை அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''இந்திய உபகண்டத்திற்கு அரசியல் சட்டத்தைத் தந்த நம் மேதை டாக்டர் அம்பேத்கருடைய நினைவு நாளில் அவர் என்ன கொள்கைகளை வகுத்துக் கொடுத்தாரோ, அரசியல் சட்டத்திற்கு என்னென்ன விதிகளை வகுத்துக் கொடுத்தாரோ, அவை அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்கின்ற அநீதியில் தமிழ்நாட்டினுடைய இன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஈடுபட்டு வருகிறார். அவருக்கு இல்லாத அதிகாரங்களை அவராகவே எடுத்துக் கொண்டு பிஜேபியினுடைய ஏஜென்டாக; எடுபிடியாக; ஒரு தூதுவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

 

டாக்டர் அம்பேத்கருடைய கனவு நனவாக வேண்டும் எனில், முதலில் இந்த ஆளுநரை இங்கிருந்து வெளியே அனுப்ப வேண்டும். மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும். அம்பேத்கர் வகுத்த அரசியல் சட்டம் என்பது உலகத்திலேயே இப்படிப்பட்ட ஒரு அரசியல் சட்டம் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு அவரது அறிவாற்றல் பயன்பட்டது. அவர் உலக நாடுகளுக்கு எல்லாம் ஆலோசனை சொல்லக்கூடிய அளவுக்கு ஆற்றல் மிக்கவர். சட்ட அமைச்சராக இருந்த பொழுது தான் முக்கியமான சில சட்டங்களைக் கொண்டு வந்தார். அதன் பிறகு அவராகவே ராஜினாமா செய்து விட்டுப் போனார். அவருடைய புகழ் என்றைக்கும் மங்காது; மறையாது; ஓங்கி நிற்கும். நிலத்தில் இருக்கும் அம்பேத்கரின் புகழ் மண்ணிருக்கும் வரை விண்ணிருக்கும் வரை இருக்கும்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர்கள், “குஜராத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், அங்கு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. இது தமிழகத் தேர்தல் களத்தில் அரசியல் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைகோ, ''வேறு மாநிலங்களில் நடப்பது இங்கே நடக்காது. அது பிரதிபலிக்கவும் செய்யாது. திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். இந்தியாவில் வேறு மாநிலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ்நாட்டிலே எந்த மாற்றமும் ஏற்படாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.