Skip to main content

“இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும்” - கமல்ஹாசன் பேட்டி

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

If such incidents continue, democracy itself can be endangered Kamal Haasan interview

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது கவனத்திற்கு வந்த சில பிரச்சினைகள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பில் நீடிக்கும் மர்மங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகியவை தொடர்பான மனுவை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்களை நேரில் சந்தித்துக் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசியதாவது, “ஸ்ட்ராங் ரூம் என்பது உண்மையான ஸ்ட்ராங் ரூமாக இருக்க வேண்டும்.

 

சிசிடிவி கேமராக்கள் அவ்வப்போது செயலிழப்பதும், மர்ம கண்டெய்னர் வளாகத்தில் நுழைவதும், திடீர் தீடீரென வைஃபை வசதிகள் வளாகத்தின் உள்ளும், வெளியூம் உருவாகுவதும், லேப்டாப்புடன் மர்ம நபர்கள் நடமாடுவதும், மின்சராத் தடை ஏற்படுவதும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் முறையாக நடத்தப்பட்டு, முடிவுகள் சரியாக அறிவிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை மக்களிடத்திலும், வேட்பாளர்கள், அரசியல்வாதிகளின் மத்தியிலும் உருவாக்குவதும் தேர்தல் ஆணையத்தின் கடமை.

 

ஏற்கனவே 30 சதவீத வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை. அதேபோல் வாக்குப்பதிவிலும், வாக்கு இயந்திரத்திலும் இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தால், வாக்கு சதவீதம் குறையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும். வாக்காளர் பட்டியல் குளறுபடிகளையும் புகாராக அளித்திருக்கிறோம். இது முதல் கட்டம் மட்டுமே. இன்னும் அதிக புகார்கள் இருக்கின்றன, மற்றும் வந்த வண்ணம் உள்ளன. அதையும் திரட்டி உங்கள் முன் கொண்டு வருவோம். இது ஜனநாயகத்தைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி; எங்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் அல்ல.

 

மேலும், தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரத்தைக் கையாளுவதிலும், பாதுகாப்பதிலும் தவறு உள்ளது என்பதுதான் எங்களின் புகார். அதைப் புகாராக கூற விரும்பவில்லை, அதனால் பரிந்துரைகளாக கொடுத்திருக்கிறோம். மொத்தம் 75 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், இந்தப் புகார் அனைத்து இடங்களுக்கும் பொருந்துமா என்றால், விருந்தில் உண்ண தகாத ஒன்றை எந்த ஓரத்தில் வைத்தாலும் தவறு. அது போன்றுதான் இதுவும். அதனால் அது வாழை இலையிலே வரக்கூடாது” என்றார்  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.