Skip to main content

இத்தனையும் நடந்தால் பொதுச் செயலாளர் போட்டிக்கு தயார்; பன்னீர்செல்வம் ஓப்பன் டாக்!

Published on 26/03/2023 | Edited on 26/03/2023

 

If all this happens, the Secretary General is ready to compete; Panneerselvam Doc!

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இருவரையும் சந்தித்து கட்சியை ஒருங்கிணைப்பேன் என சசிகலா கூறியுள்ளார். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் கழகம் முழுமையாக வெற்றி பெறும் என ஆரம்பத்தில் இருந்து நாங்கள் சொல்லி வருகிறோம். சாதாரண தொண்டன் கூட கழக விதிப்படி கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம். ஆனால், அவர்கள் விதிகளை மாற்றி 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்றும் 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்றும் கூறி அவர்கள் தான் சட்டத்தை திருத்தியுள்ளார்கள். அதைத்தான் கூடாது என்கிறோம். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கழகத்தின் சட்ட விதிப்படி கழகத்தை வழிநடத்தி மகத்தான வெற்றிகளை ஈட்டி தமிழகத்திலே ஆளும் உரிமையை பெற்ற கட்சி அதிமுக எனும் நிலையை உருவாக்கியுள்ளார்கள். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். 

 

தொண்டர்கள் தேர்ந்தெடுத்தால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவீர்களா என கேட்கிறார்கள். இது குறித்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். கழகத்தின் சட்ட விதிகளின் படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களது அட்டையை புதுப்பித்துக் கொள்வதற்கும் கழகத்தின் சட்டவிதி இருக்கிறது. அந்த விதிகளின் படி, இருக்கின்ற கிளைக் கழகங்கள் அத்தனைக்கும் புதிதாக உறுப்பினர் படிவங்கள் கொடுக்கப்பட வேண்டும். படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு அவை தலைமைக் கழகத்தில் கொடுக்கப்பட்ட பிறகு கழகத்தின் சட்ட விதிப்படி அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து கழகத்தின் அமைப்பு ரீதியிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி அனைவரும் வாக்களித்து இத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அப்படிச் செய்தால் உறுதியாக அனைத்து கீழ் நிலையில் இருக்கும் தொண்டர்கள் முதற்கொண்டு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற சூழ்நிலை உருவாகும். அந்த சூழ்நிலைதான் எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா காலம் வரை இருந்தது. அதை மாற்றியுள்ளார்கள். மாற்றக்கூடாது என சொல்லியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.