ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பு திட்டங்களை தமிழக கடலோர மாவட்டங்களில், காவிரி சமவெளிப் பகுதிகளில் மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

Advertisment

NAGAPATTINAM mla

மரக்காணம் தொடங்கி தூத்துக்குடி வரை நடைப்பெற்ற போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

நாகப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார்.

Advertisment

அவருடன் தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், விவசாய சங்க கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன் உள்ளிட்டவர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.