Skip to main content

அரசின் மோதல் போக்கால் சிக்கலில் மாட்டும் கலெக்டர்கள்; விளக்கும் ஆளுநர் தமிழிசை

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

Governor Tamilisai on conflict trend of Telangana government

 

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தெலுங்கானா ஆளுநரை முன்வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளை அம்மாநில அரசு பெரும்பாலும் தவிர்த்து வருகிறது.  

 

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளைப் போலவே குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை இந்தாண்டும் நடத்த இயலாது என ஆளுநர் மாளிகைக்கு தெரிவித்துவிட்டது. அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் அணிவகுப்பை ரத்து செய்யக்கூடாது என்றும் நிச்சயம் குடியரசு தின அணிவகுப்பை நடத்த வேண்டும் என நேற்று உத்தரவிட்டு இருந்தது. இதனை அடுத்து ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாவினை நடத்திக் கொள்ளும்படி ஆளுநரை கேட்டுக்கொண்ட அரசு, காவல்துறை அணிவகுப்பிற்கும் ஏற்பாடு செய்தது. தொடர்ந்து குடியரசு தினவிழாவினை ஒட்டி வழங்கப்படும் விருதுகளை ஆளுநர் தமிழிசை வழங்கினார்.

 

இந்நிலையில் புதுச்சேரியில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை, “அனைத்து அதிகாரமும் ஆளுநருக்கு இருக்கிறது. அதிகாரத்தை பயன்படுத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்துகிறார் எனச் சொல்லுகிறீர்கள். இல்லையென்றால் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என சொல்லுகிறீர்கள். தெலுங்கானா முதல்வர் மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என முடிவு செய்து ஆளுநரையும் எதிர்க்கிறார். இது எனக்கு புளித்துவிட்டது. மாதம் மாதம் மத்திய அரசுக்கு நாங்கள் ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும். அந்த அறிக்கையில் நான் அனைத்தையும் குறிப்பிட்டு அனுப்பிவிடுவேன். எந்த கலெக்டர் என்னை வரவேற்கவில்லை என அனைத்தையும் எழுதி விடுவேன். 

 

அவர்கள் மேல் தனி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதை நானே எடுக்கலாம். அவர்களது வருங்காலம் பாதிக்கப்படும் என்பதால் அதை தவிர்க்கிறேன். ஏனென்றால் அவர்களாக வராமல் இல்லை. அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்படுவதால் வராமல் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் வராமல் இருக்கிறார்கள். இன்னொருவரின் வாழ்க்கையினை கெடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.