Skip to main content

“விஜயகாந்த்தினை பார்த்து நீங்கள் அவ்வளவுதான் எனச் சொன்னவரைக் கடவுள் கொண்டு சென்றுவிட்டார்” - பிரேமலதா

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

"God has taken away the one who saw Vijayakanth and said 'That's it'" - Premalatha

 

கன்னியாகுமரியில் தேமுதிக சார்பில் கழக கூட்டம் நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “காசு கொடுக்காமல் சோறு, நூறு என எதுவும் கொடுக்காமல் கூடும் கூட்டம் தேமுதிக கூட்டம் மட்டும்தான். இங்கிருக்கும் ஒவ்வொரு கொடி, பேனர், அந்த டியூப் லைட்ஸ் இவை எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. நாம் என்ன ஆளுங்கட்சியா இல்லை எதிர்க்கட்சியா எதுவுமே இல்லையே. எதிர்க்கட்சியாக ஆனோம். ஆனா எல்லாரும் துரோகம் பண்ணி விஜயகாந்த் முதுகில் குத்திவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் எல்லோரும் விஜயகாந்த் உடன் இருந்திருந்தால் அவருக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டு இருக்காது. இந்தக் கட்சியை யாராலும் தொட்டுப் பார்க்கவும் முடிந்திருக்காது. விஜயகாந்த் மிக நல்லவர் ஆனால் எல்லோரையும் நம்பிவிட்டார். 

 

விஜயகாந்த் முதுகில் குத்திவிட்டுப் போனவர்கள், நாம் நன்றாக இருக்கிறோம் என்று இன்று நினைக்கலாம். ஒருவர் கூட நன்றாக இல்லை. ஜெயலலிதாவை விஜயகாந்த் அப்படி என்ன கேட்டுவிட்டார். ஏன் பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்தினீர்கள் என்றுதான் கேட்டார். மக்கள் பிரச்சனைகளைத் தானே கேட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா, இனிமேல் உங்களுக்கு இறங்கு முகம்தான் என்று சொன்னார். 

 

விஜயகாந்த்திற்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர் இன்றும் நம்முடன் இருக்கிறார் அல்லவா. விஜயகாந்த்தினைப் பார்த்து நீங்கள் அவ்வளவுதான் எனச் சொன்னவரை நீங்கள் அவ்வளவுதான் எனக் கடவுள் கொண்டு சென்றுவிட்டார். 

 

விஜயகாந்த் எந்த லட்சியத்திற்காகக் கட்சியை ஆரம்பித்தாரோ அவர் கண் முன் அவை கண்டிப்பாக  நிறைவேறும்” எனக் கூறினார்.

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” - விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Premalatha Vijayakanth on Vijayakanth's health No one should believe rumours” -

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் அதனால் யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், அதனை நம்பவும் வேண்டாம்” என்று கூறியுள்ளார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நீட் தேர்வை ஒழிக்க முடியாது - பிரேமலதா விஜயகாந்த்

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Premalatha Vijayakanth says NEET cannot be abolished

 

சேலம் மாவட்டத்தில், தே.மு.தி.க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (27-10-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

 

அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலின் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி நீட்டை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்கிறார். 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட்டை ஒழிக்க முடியாது. நீட்டை ஒழிக்க முடியாது என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. அதனால், தயவுசெய்து மாணவர்களை குழப்பாதீர்கள். அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களை குழப்பி, அவர்களை திசை திருப்பும் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாணவர்கள் யாரும் இவர்கள் சொல்வதை கேட்க தயாராக இல்லை என்பது உண்மை. தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டு மாணவர்கள் அனைவரும் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

 

ஏனென்றால், இந்தியாவிலேயே அதிகளவு படிப்பறிவு இல்லாத மாநிலம் பீகார். அந்த மாநிலத்தில் உள்ள மாணவர்களே நீட் தேர்வுக்கு தயாராகி படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவிலேயே அதிகளவு படிப்பறிவு உள்ள தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் இவர்கள் குழப்பி கொண்டிருக்கிறார்கள். நீட்டை ஒழிப்போம் என்று கூறிய ஒரே காரணத்திற்காக உதயநிதி ஸ்டாலின் அதையே கையில் கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார். 

 

ஒரு அரசாங்கம், மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும். இனிமேல் நீட்டை ஒழிக்க முடியாது, அனைவரும் படிக்க தயாராகுங்கள் என்று அவர்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும். இன்றைக்கு அனைத்து மாணவர்கள் தேர்வு எழுத தயாராகிவிட்டார்கள். அதனால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகமான மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள்” என்று கூறினார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்