Skip to main content

கொள்ளையடித்த நகையை பரிசாக கொடுத்ததாக வாக்குமூலம்... ஆளும் கட்சி விவிஐபிக்களை கெஞ்சும் நடிகைகள்..!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

 

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடந்த நகைக்கொள்ளை சம்பவத்தில் திருவாரூரைச் சேர்ந்த முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். முருகன் கர்நாடக மாநிலம் பெங்களூவில் வேறொரு வழக்கில் சரண் அடைந்தான். 
 

செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த சுரேசை, திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவன் பல்வேறு தகவல்களை சொல்லியுள்ளான். இதுபற்றி போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, ''முருகன் கொள்ளையடித்த பணத்தில் சினிமா தயாரிக்க திட்டமிட்டு, அதற்காக சுரேசுடன் ஐதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளான். அப்போது தெலுங்கு, தமிழ் நடிகைகள் பலரை சந்தித்து படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளான். 

 

robbery


 

இதுபற்றி மேலும் சுரேஷ், ஒரு தமிழ் நடிகையை ஐதராபாத்தில் நானும், முருகனும் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தான் பிஸியாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது சில நகைகளை காண்பித்தோம். நன்றாக இருக்கிறது என்றார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்துள்ளோம் என்றதும், அப்படியா என்றவர் நெருக்கி பழக ஆரம்பித்தார்.  


 

எங்களிடம் நெருங்கி பழகியதால் அந்த நடிகைக்கு முருகன் நகைகளை பரிசாக அளித்தார். அந்த நடிகையும் மறுக்காமல் மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டார். அதிலிருந்து நாங்கள் தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் நெருக்கமாக பழகினோம்'' என்று தெரிவித்துள்ளான். சுரேஷ் சொல்வது உண்மையாக இருக்குமா? போலீசாரின் கவனத்தை திசை திருப்ப இப்படி சொல்கிறானா? என்று விசாரணை நடத்த முருகனை காவலில் எடுக்க திருச்சி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் பெங்களூரு நீதிமன்றம் பெங்களூருவில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசாருக்கே முருகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து வருகிறது. இதனால் முருகனை எப்படி காவலில் எடுத்து விசாரிப்பது என திருச்சி போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 
 

இதனிடையே முருகன் நெருங்கி பழகியதாக கூறப்படும் நடிகைகளிடம் தமிழக மற்றும் கர்நாடக போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். உங்களுக்கு எப்படி முருகன் அறிமுகம்? எப்படி நகையை பெற்றீர்கள்? அந்த நகைகளை வைத்திருக்கிறீர்களா? முருகனைப் பற்றி வேறென்ன தெரியும்? என பல்வேறு கேள்விகளை கேட்க உள்ளார்களாம்.


 

இதனை அறிந்த தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள், ஆளும் கட்சியைச் சேர்ந்த விவிஐபிக்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆளும் கட்சி விவிஐபிக்களுக்கு நெருக்கமானவர்களிடம், அவர்கள் கொள்ளையர்கள் என்று தெரியாது, சினிமா தயாரிப்பாளர்கள் என்று வந்தார்கள், நகைக்கடை வைத்திருப்பதாகவும் சொன்னார்கள், நகையை பரிசாக அளிப்பதாக சொன்னதால் வாங்கிக்கொண்டோமே தவிர மற்றப்படி எந்தவித தொடர்புகளும் கிடையாது. இதனை அவர்களுக்கு (ஆளும் கட்சி விவிஐபிக்கள்) தெரியப்படுத்துங்கள். போலீஸ் விசாரணை செய்ய வந்தால் அசிங்கமாகும். எங்களுக்கு இப்போது நல்ல மார்க்கெட் இருக்கிறது. அதை கெடாமல் பார்த்துக்கொள்ளணும். அதற்கு உங்க உதவி வேண்டுமென்று தொடர்ந்து போன் செய்து வருகிறார்களாம். 
 

கொள்ளைச் சம்பவ விஷயம் கைது, பறிமுதல் என பெரிய அளவில் வெளியே தெரிந்துவிட்டதால் இதில் எப்படி நாம் தலையிட முடியும், தலையிட்டால் நமக்கு அவப்பெயர் ஏற்படாதா என்று ஆளும் கட்சியினரும் நழுவி வருகிறார்களாம்...

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.