Skip to main content

ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி! ஆன்லைனில் துவக்கிய தி.மு.க. இளைஞர்! 

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

                          

Arockia Edwin

 


கரோனா ஊரடங்கு பேரிடர் காலத்தை நெல்லை மாவட்ட ஏழை எளிய மாணவ-மாணவியர்கள் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளும் ஒரு அற்புத வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது தி.மு.கவின் நெல்லை கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி! 
                        


இந்தப் பேரிடர் காலத்தில் மாணவ-மாணவியர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்திற்கேற்ப அவர்களின் கல்வித் திறனைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில், ‘நெல்லை மாவட்டத்தில் ஐ.ஏ.ஏஸ்.!’ என்கிற முழக்கத்துடன், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் தொடங்கியிருக்கிறார் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய எட்வின். 
                       
பொது முடக்க காலத்தில் தி.மு.க. இளைஞரின் இத்தகைய முயற்சி, நெல்லை மாவட்ட மாணவர்கள் மத்தியில் பரபரப்பாக எதிரொலிக்கிறது. இது குறித்து ஆரோக்கிய எட்வினிடம் நாம் பேசியபோது, ‘’ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் எங்கள் மாவட்ட ஏழை எளிய நடுத்தரவர்க்கத்து மாணவர்களுக்கான அடுத்த கட்ட முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம். நெல்லை மாவட்ட மாணவர்கள் அதிகளவில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது என்னுடைய பேராவல். அதனால், அவர்களுக்கு அத்தகைய வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என முடிவு செய்தோம்.                    

தற்போதைய நெருக்கடி காலத்தில் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் அவர்களை இப்போதிலிருந்தே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார்படுத்துவோம் எனத் திட்டமிட்டு, ஆன்லைனில் ஐ.ஏ.எஸ். பயிற்சியைத் தொடங்க முடிவு செய்து முதல் கட்ட முயற்சியை எடுத்து வைத்துள்ளோம். இதனை அடுத்து, மாவட்டத்தில் சில இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு நேரடியாகவும் பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கிறோம். 
 

     
முதல் 2 மாதங்கள் ஆன்லைனில் வகுப்புகள் நடப்பதால் அதற்குரிய பயிற்சிக் கட்டணத்தை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். அந்த வகையில், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும். போட்டித் தேர்வுகளில் நெல்லை மாவட்ட மாணவர்களை வெற்றியாளர்களாககவும், அதிக அளவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும் உருவாக்குவதே நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின்  இலக்கு‘’ என்கிறார் பெருமிதமாக. 
                     
ஆன்லைன் இலவசப் பயிற்சி வகுப்புகளில் இணைய 89397 56344 என்கிற பொது எண்ணையும் வெளியிட்டுள்ளார் ஆரோக்கிய எட்வின்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்; தேர்வு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
4000 Assistant Professor posts; Exam Notification


தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரம் உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்களுக்கான தேர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 569 தமிழ் உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட நான்காயிரம் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.