Skip to main content

நான்கு தொகுதியிலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்த்து! உற்சாகத்தில் முன்னாள் அமைச்சர்...

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
natham r viswanathan

 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரித்து கட்சி வளர்ச்சிக்காக புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் நியமித்து வருகிறார்கள். அதுபோல்தான் திண்டுக்கல் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த மருதராஜ்க்கு கழக அமைப்பு செயலாளர் பதவி கொடுத்துவிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், வனத்துறை அமைச்சர் சீனிவாசனுக்கும் மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்து இருக்கிறார்கள்.

 

இதில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை மேற்கு மாவட்டமாக பிரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர். அதுபோல் மீதமுள்ள நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை கிழக்கு மாவட்டமாக பிரித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர். இப்படி திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கிழக்கு மேற்கு என உருவாக்கி கட்சி வளர்ச்சியை பலப்படுத்தி இருப்பதை கண்டு ர.ர.க்களும் புது தெம்புடன் இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில்தான் புதிதாக கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

இதனைக் கண்ட விஸ்வநாதன், கரோனா காலம் என்பதால் வீட்டுக்கு வரச்சொல்வதை தவிர்த்துவிட்டு தொகுதியில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களையும் நத்தம் அருகே உள்ள தனது என்.பி.ஆர். காலேஜுக்கு வாழ்த்து தெரிவிக்க வருமாறு கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து தான் நான்கு தொகுதிகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் சாரை சாரையாக என்.பி.ஆர். காலேஜ்க்கு படையெடுத்து சமூக இடை வெளியுடன் முககவசம் அணிந்து நத்தம் விஸ்வநாதனுக்கு சால்வை மாலைகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

இதில் தீவிர ஆதரவாளர்களான பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மற்றும் முன்னாள் திண்டுக்கல் மாநகர கவுன்சிலர் திருமாறன் உள்பட சில ர.ர.க்கள் ஜெயலலிதா, இபிஸ், ஓபிஎஸ், விசுவநாதன் மற்றும் அவரது மாப்பிள்ளையான நத்தம் யூனியன் சேர்மன் கண்ணன் படங்களையும் முககவசத்தில் போட்டு அதை அணிந்தவாறு  பெருந்திரளாக வந்து வாழ்த்து பொக்கேக்களை வழங்கினார்கள். இப்படி வந்த கட்சி பொறுப்பாளர்களுக்கு ஸ்வீட், காரத்துடன் பாட்டில் தண்ணீர் மற்றும் டீ, காபியும் கொடுத்து அனுப்பி வைத்தனர். 

 

ஆரம்ப காலத்திலிருந்து விஸ்வநாதன் கட்சியில் இருந்து வந்ததால் சாணார்பட்டி யூனியன் சேர்மனை தொடர்ந்து, நத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் மூலம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நான்கு முறை தொகுதியை தக்கவைத்து, இரண்டு முறை முப்பெரும் துறை அமைச்சராக இருந்து தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுத்து நத்தம் தொகுதியை அதிமுக கோட்டையாக உருவாக்கி வந்தார்.

 

அதோடு மாவட்ட செயலாளராக இருந்ததாலும் மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களுக்கு டாஸ்மாக் பார் மற்றும் காண்ட்ராக்ட் பணிகளையும் கொடுத்தார். அதன் மூலம் கட்சி பொறுப்பாளர்களும் தங்களை வளர்த்துக்கொண்டு விசுவாசியாக மாறி வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் சசியின் சதியால் தொகுதி மாறி ஆத்தூர் தொகுதியில் போட்டியிட ஜெ. சீட் கொடுத்ததின் மூலம் திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

 

அப்படியிருந்தும் மனம் தளராமல் தொடர்ந்து நத்தம் சட்டமன்ற தொகுதி மக்களின் நல்லது கெட்டதில் கலந்துகொண்டு, கோரிக்கைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்து கொடுத்ததுடன் மட்டுமல்லாமல், தன்னால் முடிந்த பண உதவிகளையும் செய்து கொண்டு தொகுதியில் ஒரு சிட்டிங் எம்எல்ஏ போலவே செயல்பட்டு வருகிறார். அதைக்கண்டு ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் கழக அமைப்பு செயலாளர் பதவியையும் கொடுத்தனர். அதன்பின் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட எடப்பாடி  வலியுறுத்தியும்கூட விஸ்வநாதன் மத்திய அரசியல் வேண்டாம் என்று மாநில அரசியல் போதும், அதுவும் உங்களோடும், துணை முதல்வரிடமும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி எம்.பி. சீட் வேண்டாம் என்றுகூறி தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்தார்.

 

இந்த நிலையில்தான், திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து அதில் நான்கு தொகுதிகளை கொண்ட கிழக்கு மாவட்ட செயலாளராக நத்தம் விஸ்வநாதனை ஒபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் நியமித்தை கண்டு தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் நன்றியை மறக்காமல் வந்து வாழ்த்து கூறி, அவர்களிடம் தொடர்ந்து கட்சி பணியாற்றுங்கள் தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறேன் என்று  கூறி இருக்கிறார். அதை கண்டு பொறுப்பில் உள்ள  ர.ர.க்களும் உற்சாகத்துடன் தொகுதிகளில் களம் இறங்கி வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.