Skip to main content

“எடப்பாடி பழனிசாமி டேபிளுக்கு கீழே பார்க்க கூடாது!” -  உதயநிதி கிண்டல்!! 

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

"Edappadi Palanisamy should not look under the table!" - Udhayanithi

 

''சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரில் உள்ள இருக்கையில்தான் அமர்ந்து இருந்தேன். அவர் டேபிளுக்கு மேலே பார்த்தால்தான் தெரிவேன். டேபிளுக்குக் கீழே பார்த்தால் எப்படி தெரிவேன்,'' என பரப்புரைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பேசினார்.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ புதன்கிழமை (பிப். 16) ஆத்தூரில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியது: “ஆரவாரம், எழுச்சி, அன்பு, பாசம் ஆகியவை எப்போதும் இருக்கிறது. ஆனாலும்  சேலம் மாவட்ட மக்களை நம்ப முடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான் பரப்புரைக்கு வந்தபோது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம் என்று சொன்னீர்கள்.

 

ஆனால் 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவை வெற்றி பெற வைத்தீர்கள். இது நியாயமாக தப்பு என்று தெரியவில்லையா? இந்த தப்பை மீண்டும் செய்வீர்களா? தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களும் அதிகளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்தனர். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 9 மாத காலத்தில் கரோனா இரண்டாவது அலையின்போது மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆக்சிஜன் வசதி இல்லை. 

 

"Edappadi Palanisamy should not look under the table!" - Udhayanithi

 

கடந்த ஆட்சியில் கரோனா விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஒரு கோடி தடுப்பூசி மட்டுமே செலுத்தினர். ஆனால் திமுக ஆட்சியில் 9 மாத காலத்தில் பத்து கோடி பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். கரோனா மூன்றாவது அலையை தடுத்து இருக்கிறோம். நாட்டிலேயே கரோனா மூன்றாவது அலை தடுப்புப் பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

 

ஆட்சி அமைந்த முதல் மூன்று மாத காலம், கரோனா தடுப்புப் பணிகளுக்காக செலவு செய்தோம். கலைஞர் சொன்னது போல சொல்வதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம். கடந்த ஆட்சியில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். 

 

குறிப்பாக கரோனா நிவாரணமாக இரண்டு தவணையாக 4000 ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். விரைவில் குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். கடந்த 9 மாத கால திமுக ஆட்சியின் சாதனைகளை கருத்தில் கொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். 

 

ஆத்தூர் மக்களின் கோரிக்கைகளான பாதாள சாக்கடைத் திட்டம், சீரான குடிநீர், ஆத்தூர் வடக்கே பைபாஸ் சாலை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அத்திட்டப் பணிகள் தொடரும். எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன் பட்டா இல்லாத இடத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிசாமியும், அவருடைய கூட்டாளிகளும் விரைவில் சிறைக்கு செல்வார்கள். 

 

சட்டமன்ற தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை சொல்லி பிரச்சாரம் செய்ததால் உதயநிதி ஸ்டாலினை காணவில்லை என எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 9ம் தேதி நடந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அவருக்கு எதிரில்தான் அமர்ந்து இருந்தேன். அவருக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி அவர்களே... நாற்காலிக்கு மேலே பாருங்கள். கீழே பார்த்தால் நான் தெரிய மாட்டேன். நான் உங்களை தவறாகச் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தை முடக்குவேன் என்று சொல்லி வருகிறார். நாங்கள் மக்களை சந்தித்து ஆட்சி அமைத்திருக்கிறோம். உங்களைப்போல கூவத்தூரில் இருந்து ஆட்சி அமைக்கவில்லை” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

 

இதையடுத்து அவர் சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதே போன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளார் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு. எனவே ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். தி.மு.க. தொண்டர்கள் பொறுப்பேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் 100 ஆவது பிறந்த நாள் முடிந்து 101 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். நாம் அவருக்கு கொடுக்க கூடிய பரிசாக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனப் பேசினார்.

Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

முன்னதாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி இல்லத்தில் இருந்து ‘மாநில உரிமைகளை மீட்க தலைவரின் குரல்’ 2 ஆம் கட்ட நாடாளுமன்ற பிரச்சாரப் பயணத்தை துவக்குவதில் பெருமை கொள்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக. தலைவர் தலைமையில் திராவிட மாடல் அரசு வெல்லட்டும். பாசிசம் ஒழியட்டும். BELONG TO THE DRAVIDIAN STOCK” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநில சுயாட்சியின் உரிமைக்குரல் நம் அண்ணாவின் மண்ணில், பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

புதிய வாக்காளர்களுக்கு சூரி சொன்ன அறிவுரை

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
soori advise to first time voters

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் நேற்று திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூரி பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தனது படங்கள் குறித்துப் பேசிய சூரி, “விடுதலை 2 இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பு இருக்கு. எனக்கான போர்ஷன் முடிஞ்சிருச்சு. சீக்கிரம் வெளியாகவுள்ளது. விடுதலைக்கு முன்னாடி கருடன் வந்துவிடும். அந்த பட படப்பிடிப்பு அனைத்தும் முடிஞ்சிருச்சு. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடந்துக்கிட்டு வருகிறது. அதுவும் விரைவில் வரும். கண்டிப்பா விடுதலை மாதிரி கருடன் படமும் எல்லாருக்கும் புடிக்கும். ஒரு நல்ல படமா இருக்கும்” என்றார். 

அவரிடம் உதயநிதி மதுரையில் பிரச்சாரத்திற்கு வந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார். நடைபெறவுள்ள தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு தேர்தலும் அதன் ரிசல்ட்டு வந்த பிறகுதான் தெரியும். நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். மக்களுக்கு நல்லதாக அமைந்தால் இன்னும் சந்தோஷம்” என்றார். 

உதயநிதி பிரச்சாரத்திற்கு அழைத்தாரா என்ற கேள்விக்கு, “அவர் என்னை அழைக்கவில்லை. நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பேன் என அவருக்கு தெரியும்” என்றார். புதிய வாக்களர்களுக்கு நீங்க சொல்லக்கூடிய விஷயம் என்ன என்ற கேள்விக்கு, “கன்னி சாமி மாதிரி எல்லாரும் கன்னி ஓட்டுக்கு ரெடியா இருக்காங்க. ஒவ்வொரு ஓட்டும் சாதாரணமானது கிடையாது. நாட்டின் வளர்ச்சிக்கான ஓட்டு. நம்முடைய வாழ்க்கைக்கான ஓட்டும் கூட. அதை கணிச்சு, யாருக்கு போடணுமோ அவர்களுக்கு போடுவாங்க என நம்புறேன்” என்றார்.