Skip to main content

சசிகலா டீமுடன் சகஜமா இருக்கும் அமைச்சர்கள்!!! கவனமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி!!!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020
sasikala

 

 

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அமைச்சர்கள் இப்பவும் சசிகலா டீமுடன் சகஜமா இருக்கிறார்கள். டெல்டா பகுதியில் இருக்கும் எடமேலையூர், கண்டியர் தெரு ஊராட்சி மன்றத்தின் தலைவராக சித்ரா ராமச்சந்திரன் என்பவரை, உள்ளாட்சி தேர்தலில் நிறுத்தி, அவரை வெற்றி பெறச்செய்தவர், திவாகரனின் மகனான ஜெய் ஆனந்த். இப்பவும் அவர் மேற்பார்வையில் இருக்கும் இந்த பகுதிக்கு அமைச்சர் காமராஜ் நிறைய உதவிகளைச் செய்வதன் மூலம், மன்னார்குடித் தரப்புக்கு தன் விசுவாசத்தைக் காட்டிக்கிட்டு இருக்கிறாராம். சமீபத்தில் அந்த சித்ரா ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டபடி, நடமாடும் நியாய விலைக் கடையையும் ஏற்பாடு செய்துகொடுத்து, மன்னார்குடித் தரப்பை மனம் குளிர வச்சிருக்கார் காமராஜ்.

 

ஆனால், சசிகலா ரிலீசாவதை எடப்பாடி மனப்பூர்வமா விரும்பவில்லையாம். தன் அதிகாரத்தை தக்க வைக்க வேண்டும் என்றால் சசிகலா உடனடியாக ரிலீஸ் ஆகிவிடக்கூடாது என்று எடப்பாடி நினைக்கிறாராம். தேர்தலுக்குள் சசி வெளியே வந்தால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்னு அவர் பயப்படறாராம். அதனால், சிறைத் தண்டனையோடு, சசிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 10 கோடி ரூபாயை, அவர் கட்டிவிடக் கூடாது என்பதில் எடப்பாடி ரொம்பவே கவனமாக இருக்கிறாராம். சசியுடன் சிறையில் இருக்கும் இளவரசியும், சுதாகரனும் அபராதத் தொகையை ஒரு வழியா கட்டிட்டாங்க. எனினும் சசிகலாவோ, அபராதத்தை எந்த கணக்கை காட்டி, கட்டுவதென்று தவித்து வருகிறாராம். அதனால் அவர் மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறதுன்னு அ.தி.மு.க. சீனியர்கள் சொல்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.