Skip to main content

“சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா?” - அமைச்சர் மா.சு. பேட்டி

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

 "Does Shivaji Krishnamurthy need so much publicity?" - Interviewed by Minister M. Su

 

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொங்கல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்டார்.

 

அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள், “இந்த வருடம் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில், விளம்பரங்களில் தமிழ்ப்புத்தாண்டு என்று குறிப்பிடாமல் தமிழர் திருநாள், பொங்கல் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்களே?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சு, “தமிழர் திருநாள் என்பது தமிழ்ப்புத்தாண்டு என்பதைக் குறிக்கின்ற நாள்தான். இது சமத்துவப் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு தமிழர் திருநாள்” என்றார்.

 

“ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அதிமுக ஆதரித்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “அவர்கள் இதைத் தெரிந்து செய்தார்களா, தெரியாமல் செய்தார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு 60க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போது இருக்கிறார்கள். அப்படி நடந்தால் ஒன்றுமே இல்லாத நிலை அவர்களின் இயக்கத்திற்கு உருவாகும் என்பதைத் தெரிந்து செய்தார்களோ தெரியாமல் செய்தார்களோ என்று தெரியவில்லை'' என்றார்.

 

“விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் குறித்து அவதூறாகப் பேசி உள்ளது வைரலாகி வருகிறதே” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “திமுகவில் மேடையில் ஒரு பேச்சாளர் அநாகரீகமாகப் பேசி இருப்பது வருத்தத்திற்குரியது. அதற்கு தமிழக முதல்வரைப் பொறுத்தவரை எப்பொழுதுமே சாதகமாகப் பதில் சொல்லமாட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி எந்த வகையிலும் அநாகரீகமாக பேசக்கூடாது; ஆளுநரை தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேசக்கூடாது என்று அறிவுறுத்தினார் முதல்வர். அடுத்தநாளே எல்லா செய்தித்தாள்களிலும் இது செய்தியாக வந்தது.

 

எனவே, தலைமைக் கழகத்தின் சார்பில் நிச்சயமாக ஆதரவளிக்கின்ற விஷயம் அல்ல இது. யாரோ ஒரு பேச்சாளர் பேசினார் என்பதற்காக இன்று ஆளுநர் மாளிகை வளாகமே வழக்கு தொடுத்து இருக்கிறது என்பதுதான் விந்தையாக இருக்கிறது. காரணம் எல்லா கட்சிகளிலும் பேச்சாளர்கள் எப்படி தரம் குறைந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த இயக்கங்களைச் சார்ந்தவர்கள் யாரும் அவர்களைக் கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், திமுகவில் எங்கேயோ ஒரு பேச்சாளர் தரக்குறைவாகப் பேசினார் என்பதற்கு நாங்களும் வருந்துகிறோம். ஆனாலும் இதற்கென்று இவ்வளவு விளம்பரம் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு தேவையா என்பதுதான் தெரியவில்லை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.