Skip to main content

உதயநிதி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நாகை திமுகவினர்!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

DMK Youth wing Secretary's udhaynithi stalin birthday celebration nagai

 

 

நாகை மாவட்ட தி.மு.க.வினர் எப்போதுமே இல்லாத அளவிற்கு போட்டிப்போட்டுக்கொண்டு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கின்றனர்.

 

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.வில் முதல் ஆளாக கடந்த 20ஆம் தேதி திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் உதயநிதி ஸ்டாலின். அவரை பிரச்சாரத்தில் இருக்கும்போதே தொடர்ந்து கைதுசெய்து பரபரக்க செய்தனர் காவல்துறையினர். தி.மு.க. நிர்வாகிகளோ, சாலை மறியல், போராட்டம் என ஆவேசம் காட்டி உதயநிதி ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பிடிக்கும்படி செய்துகொண்டனர். ஒவ்வொரு நிர்வாகிகளின் திடீர் ஆக்ரோஷத்தைக்கண்ட பலரும் "இதெல்லாம் தேர்தல் படுத்தும் பாடு" என்றனர்.

 

DMK Youth wing Secretary's udhaynithi stalin birthday celebration nagai

 

 

இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை உணவு அளிப்பது, ரத்ததான முகாம் நடத்துவது, வேட்டி, புடவை, அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்குவது, நிவாரண முகாம்களின் இருப்பவர்களுக்கு உதவுவது என ஜமாய்த்திருக்கின்றனர் நாகை மாவட்ட தி.மு.க.வினர்.

 

அந்த வகையில், வேதாரண்யம் கிழக்கு ஒன்றியம் செயலாளர் என்.சதாசிவம், தனது ஆதரவாளர்களோடு ஆதனூர் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு, வேட்டி, புடவை, கொசுவலை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

 

DMK Youth wing Secretary's udhaynithi stalin birthday celebration nagai

 

மயிலாடுதுறை வழக்கறிஞர் அணி செயலாளர் ராமசேயோன், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி அணியை உருவாக்கி நிவாரணம் கொடுத்து வந்தார். உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அறுசுவை உணவு, நிவாரண பொருட்கள், ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவி என கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.

 

உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு வத்தபோது ராம.சேயோன் தருமபுரம் ஆதீனத்தின் சன்னிதானத்தை சந்திக்க வைத்து, நீண்ட நேரம் அரசியல் பேச வைத்தார். அப்போது "நிச்சயம் பிரச்சாரம் வெற்றியடையும்" என சன்னிதானம் உதயநிதிக்கு ஆசி வழங்கியது அ.தி.மு.க.வினரையே வியப்படைய செய்தது.

 

DMK Youth wing Secretary's udhaynithi stalin birthday celebration nagai

 

குத்தாலம் தொகுதியை சேர்ந்த மாதிரிமங்கலம் வழக்கறிஞர் புகழரசன், நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்களோடு ரத்ததான முகாம் நடத்தியிருக்கிறார். வழக்கறிஞர் புகழரசன் முன்னாள் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்களில் ஒருவரான மாதிரிமங்கலம் கண்ணையனின் மகன் ஆவார். புகழரசனுக்கு கட்சியில் பெரிய அளவில் பொறுப்பு இல்லை என்றாலும் தி.மு.க.வின் பாரம்பரிய குடும்பம் என்பதால் கலைஞர் பெயரில் தி.மு.க.வில் உள்ள வயதானவர்களுக்கு மாதமாதம் 600 ரூபாய் ஒய்வூதியம் வழங்கி வருகிறார். ஸ்டாலின் பெயரில் நலிவடைந்த குடும்பங்களை இனம்கண்டு தினசரி உதவி செய்துவருகிறார்.

 

உதயநிதி ஸ்டாலின் பெயரில் இளைஞர்களுக்கும் படிக்கும் பிள்ளைகளுக்கும் உதவிவருகிறார். அந்தவகையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை ரத்ததான முகாம் நடத்தி அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுக்க செய்திருக்கிறார். "யார் அந்த பையன், கட்சியில என்ன பொறுப்பில் இருக்கிறார்" என சமீப நாட்களாகவே தி.மு.க. தலைமையின் பார்வை புகழரசன் மீது விழுந்திருக்கிறது.

 

இப்படி தி.மு.க.வினரின் கொண்டாட்டம், அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்க செய்திருக்கிறது. எல்லாம் தேர்தல் படுத்தும்பாடுதானோ.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.