Skip to main content

“திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்!” - கே.என்.நேரு!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

“DMK Trichy Conference on 700 acres of land” - KN Nehru

 

திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுத் திடலில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுடன் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய கே.என்.நேரு, "வருகிற மார்ச் மாதம், 14ஆம் தேதி நடைபெறக்கூடிய திமுக மாநாடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. 396 ஏக்கர் நிலப்பரப்பில், தமிழகத்தில் உள்ள 77 திமுக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் என அனைவரும் அமர்வதற்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 400 ஏக்கர் நிலம் பெறப்பட்டு 77 மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களும் பாதுகாப்பாக நிறுத்திவைப்பதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

 

எனவே, மொத்தம் 700 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறக்கூடிய இந்த மாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கூடியவர்களுக்கு சுமார் 400 சிற்றுண்டிச் சாலைகள் நியாயமான விலையில் கிடைக்கச் செய்ய அதற்கான கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

நாங்கள் ஒன்றும் பொய் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்த பயிர்க்கடன் என்பது அதிமுக ஆட்சி, கடந்த பத்து வருடமாகக் கூட்டுறவுச் சங்கங்களில் கோலோச்சி நிற்கும் நிலையில் அவர்கள் மற்றவர்களுடைய பெயரைப் பயன்படுத்தி அதன் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட அந்த பயிர்க் கடன்களை மட்டுமே அவர் தள்ளுபடி செய்து இருக்கிறார். 

 

திமுக ஆட்சி அமைந்தவுடன் யார் யார் கடன் பெற்றுள்ளார்கள். யாரின் கடனை அரசு தள்ளுபடி செய்தது என்பது பற்றிய பட்டியலை நாங்கள் வெளியிட உள்ளோம். நாங்கள் தொடர்ந்து ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்து வருகிறோம். எனவே, அவரும் நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார். இக்கூட்டத்தில் பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.