Skip to main content

இந்திய அளவில் கவனிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின்... பாஜகவிற்கு ஷாக் கொடுக்க தயாரான எதிர்க்கட்சிகள்! 

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

ஜார்கண்ட்டில் ஜே.எம்.எம். மற்றும் காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், அங்கே முதல்வராகப் பொறுப்பேற்ற ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரனின் பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின் கலந்துக்கிட்டார். அந்த விழாவில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள். தமிழகத்தில் இருந்து தி.முக. சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் சென்று இருந்தார்கள். 
 

dmk



அங்கே ஹேமந்த் சோரனுக்கு அடுத்து எல்லோராலும் தடபுடலாக வரவேற்கப்பட்டவர் ஸ்டாலின் தான் என்று கூறுகின்றனர். ராகுல் தொடங்கி மம்தா வரை, ஸ்டாலினிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணி குறித்தும் ஆர்வமாக விசாரித்துள்ளார்கள். ஸ்டாலினோ, மோடி அரசின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து கொல்கத்தா, சென்னையில் நடத்தப்பட்டது போல், இந்தியத் தலைநகரான டெல்லியிலும் ஒரு மிரட்டல் பேரணியை நாமெல்லாம் ஒன்று சேர்ந்து விரைவில் நடத்தனும்ன்னு ஆலோசனை கூறியிருக்கிறார். இதற்கு எல்லோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மத்தியில் ஆளும் பாஜக தரப்பு எதிர்கட்சியினரின் திட்டத்தை அறிந்து அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.