Skip to main content

கரோனா ஊரடங்கிலும் குடிநீருக்கு பண வசூலா? திமுக கண்டன ஆர்ப்பாட்டம்...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

dmk

 

கரோனா காலத்தில் குடிநீருக்கு பணவசூல் செய்வதை தமிழக அரசு உடனே நிறுத்தக்கோரி செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கடந்த ஜூலை 7 அந்து கரோனா தொற்றால் அரசு விடுத்த ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் செந்துறை ஒன்றியத்தில் கிராமப்புறங்களில் குடிநீர் இணைப்புக்கு உள்ளாட்சி துறை மூலம் ரூ. 1000 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் இந்த கொடுஞ்செயலைக் கண்டித்தும், கட்டண வசூலை உடனே நிறுத்த கோரியும் இன்று காலை 9 மணிக்கு செந்துறை வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

dmk

ஆலத்தியூரில் ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி, அசாவீரன் குடிக்காட்டில்கழக கொள்கைபரப்பு துணை செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி, பெரியாகுறிச்சியில் மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், பொன்பரப்பியில் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி. ஆர். பாண்டியன், குழுமூரில் ஒன்றிய பொருளாளர் கே. ஆர். பெரியசாமி, சிறுகளத்தூரில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் (பரிந்துறை) துரை. தேன்துளி, தளவாயில் ஒன்றிய வி. தொ. அணி. அமைப்பாளர்(பரிந்துறை) புலேந்திரன், அயன்தத்தனூரில் ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர்(பரிந்துறை) க. நல்லுசாமி, மணக்குடையானில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆ. தமிழ்மாறன், மணபத்தூரில் ஊராட்சி கழக செயலாளர் ஜெயராமன், வஞ்சினபுரத்தில் ஊராட்சி கழக செயலாளர் அன்பழகன், மருவத்தூரில் ஊராட்சி கழக செயலாளர் அருள்மணி, துளாரில் ஊராட்சி கழக செயலாளர் ஜெய்குமார், ஆதனக்குறிச்சியில் ஊராட்சி கழக செயலாளர் இராசேந்திரன், சன்னாசிநல்லூரில் ஒன்றிய இளைஞர் அணி துணைஅமைப்பாளர் இர. பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கலையரசன், ஒன்றிய அவைத்தலைவர் மா. சிவப்பிரகாசம், ஒன்றிய துணை செயலாளர்கள் வி. எழில்மாறன், விபி. நடேசன், மு. சபாபதி, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மு. சித்ரா, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் இராசவேல், ஒன்றிய மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பி. வித்தியா, ஒன்றிய ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் ம. ரெங்கநாதன், ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் வீரா. ராசேந்திரன், ஒன்றிய கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் இராசு, ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் இராசா, ஒன்றிய நெசவாளர் அணி ச. வேல்முருகன், ஒன்றிய சிருபான்மையோர் அணி அமைப்பாளர் அக்பர் அலி, ஒன்றிய பொறியளர் அணி அமைப்பாளர் ம. கணேசன் மற்றும் கழக முன்னணியினர் கலந்துகொண்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “தமிழக அரசே, எடப்பாடி அரசே! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! குடிநீருக்கு பணம் கேட்பதை! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! கரோனா தொற்று காலத்தில்! குடிநீருக்கு பணம் கேட்பதை! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! ஊரடங்கு காலத்தில்! வாழ்வாதாரம் இல்லாமல்! வதைபடும் மக்களிடம்! குடிநீருக்கு பணம் கேட்கும்! கொடுங்கோலன் எடப்பாடியே! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! குடிநீர்கட்டணத்தை உடனே நிறுத்து! இணைப்புக்கு 1000 ரூபாய்! எங்கேபோவோம்! எங்கேபோவோம்! ஊரடங்கு பேரிடர் நிதியாய்! அரசு கொடுத்ததோ 1000ம் ரூபாய்! அதையும் பிடுங்கும் எடப்பாடியே! உடனே நிறுத்து! உடனே நிறுத்து! ஊராடங்கு காலத்தில்! உணவுக்கு தவிக்கும் மக்களிடம்! குடிநீருக்கு பணம் கேட்கும்! உள்ளாட்சி துறையை கண்டிக்கிறோம்! உடனே நிறுத்து ! உடனே நிறுத்து! குடிநீருக்கு பணம் கேட்பதை! உடனே நிறுத்து! உடனே நிறுத்து!” என முழக்கமிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.