Skip to main content

தி.மு.க எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாது...பாஜகவின் அதிரடி திட்டம்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

கிருஷ்ண பரமாத்மாவையும் அர்ஜுனனையும் அமித்ஷாவோடும் மோடியோடும் ஒப்பிட்டு, ரஜினி பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்கா பேசப்பட்டு வருகிறது. இது பற்றி விசாரித்த போது, ரஜினிக்கு அமித்ஷாவும் மோடியும் தொடர்ந்து முக்கியத்துவம் தர்றாங்க. அதனாலதான், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் "லிசனிங் லேர்னிங் அண்ட் லீடிங்' அப்படிங்கிற புத்தக விழாவிலும் பேசும் வாய்ப்பைக் கொடுத்தாங்க. விழாவில் அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுச்சுனு சொல்லப்படுகிறது.  எப்படியாவது 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி, ரஜினியைத் தீவிர அரசியலுக்கு கொண்டுவந்துடணும்னு பா.ஜ.க. நினைச்சி வியூகம் வகுக்குது.

 

bjp



வெங்கையா நாயுடு புத்தக விழாவில் கலந்துக்கிட்ட ரஜினி, காஷ்மீரின் சிறப்பு சலுகைகளை ரத்து செய்த காரணத்துக்காக அமித்ஷாவைப் பாராட்டு மழையில் நனைச்சிட்டார். இதனால் தான் கண்டுவரும் கனவுகள் விரைவில் தமிழகத்தில் பலிச்சிடும்னு பா.ஜ.க. நம்புது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, தி.மு.க. எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாதுங்கிறதுதான் முக்கிய இலக்கு. தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்தால், அ.தி.மு.க.வைத் தங்கள் விருப்பம்போல இயக்கலாம். அதை ரஜினி மூலமா செய்யலாம்னு நினைக்குது. தங்கள் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய ரஜினியை தீவிர அரசியலுக்குக்  கொண்டு வருவதற்கு பல ப்ளான் போடப்பட்டிருக்கு. ரஜினி புதுப்புது படங்களை ஒத்துக்கிட்டாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் களத்தைச் சந்திப்பேன்னும் சொல்லிக் கிட்டு இருக்கார். 


 

 

bjp



அதோட நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிவு வந்த பிறகும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தார். இப்ப நடந்து முடிஞ்ச வேலூர் இடைத் தேர்தலிலும் ரஜினி மக்கள் மன்றத்தினர், ரஜினியிடமிருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் இரட்டை இலைக்கு வாக்களிக்கணும்னு கூட்டம் போட்டுப் பேசியதோடு, பா.ஜ.க.வுக்கு நெருக்கமான இலை வேட்பாளர் ஏ.சி.எஸ்.சுக்கு ஆதரவா வாக்கு சேகரித்தாங்க. இதையெல்லாம் கவனிச்சித்தான், ரஜினியை மையமாக்கி, ஒரு அரசியல் மாற்றத்தை இங்கே ஏற்படுத்த பா.ஜ.க. விரும்புது. ரஜினியை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அரசியல் கட்சியைத் தொடங்க வைச்சி, அதோடு அ.தி.மு.க. கூட்டணி அமைச்சா அது தி.மு.க.வுக்கு எதிரான பெரிய அணியா இருக்கும்ன்னு பா.ஜ.க. கணக்குப்போடுது. 

 

bjp



அப்படி நடந்தால், பா.ஜ.க. நேரடி கூட்டணியில் இல்லாமல், திரைமறைவில் இருக்குமாம். ஒருவேளை, ரஜினியை முதல்வர் வேட்பாளரா ஏற்க அ.தி.மு.க. சீனியர் தலைவர்களும் நீண்டகாலத் தொண்டர்களும் விரும்பாமல் போனால், ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தி, அதை ரஜினியும் பா.ஜ.க.வும் இணைந்த கூட்டணியுடன் சேர்த்து, தேர்தலை சந்திப்பதுன்னும் கணக்கு போடப்பட்டிருக்கு. எப்படிப் பார்த்தாலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ரஜினிதான் கிருஷ்ணராக கூட்டணித் தேரை ஓட்டப் போகிறார். சென்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அமித்ஷா ரஜினியை, தான் தங்கியிருந்த கவர்னர் மாளிகைக்கு அழைத்தாராம். அங்கே சந்திப்பது சரியா இருக்காதுன்னு ரஜினி மறுத்துட்டாராம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.