Skip to main content

"புதுச்சேரியில் 30 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் இந்த மேடையிலே தற்கொலை செய்துகொள்வேன்" - ஜெகத்ரட்சகன் 

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

DMK MP Jagathratchekan speech at pondicherry about pondicherry assembly election


2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த சூழலில், கடந்த 6 மாதமாக புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து வந்த தி.மு.க.வினர் காங்கிரசுடன் இணக்கமாக இல்லை.

 

தொடர்ந்து சில மாதங்களாக காங்கிரஸ் அரசுக்குப் பல்வேறு விதமாக எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ‘தி.மு.க. தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம்’ என்ற முழக்கத்தோடு புதுச்சேரி தி.மு.க.வினர் செயல்பட்டு வந்த நிலையில், புதுச்சேரி நூறு அடி சாலையில் அமைந்துள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டர் என்ற தனியார் திருமண மண்டபத்தில் புதுச்சேரி மாநில தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (18.01.2021) நடைபெற்றது.

 

புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில், புதுச்சேரி தி.மு.க மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றும், புதுச்சேரி காங்கிரஸ் எந்தவித நலத்திட்டங்களையும் செய்யவில்லை. புதுச்சேரி பின்னோக்கி சென்றது. அதனைப் போக்கும் வகையில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றும் பேசினர்.

 

தொடர்ந்து தி.மு.க. மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசும்போது, "எங்கு பார்த்தாலும் கருப்பு சிவப்பு வண்ணம் தெரிகிறது. கலைஞருக்கு அதிகம் பிடித்த ஊர் புதுச்சேரி. புதுச்சேரியில் யார் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். புதுச்சேரிக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள். புதுச்சேரி மக்கள் நல்லா இருக்க வேண்டும். விவசாயம் பொய்த்து போய்விட்டது. புதுச்சேரி எவ்வளவு பெரிய கடற்கரை. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம். புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைக்கும்” என்றார். 
 

மேலும் உச்சகட்டத்துக்கு சென்ற அவர், "புதுச்சேரியில் 30 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறவில்லை எனில் இந்த மேடையிலே தற்கொலை செய்து கொள்வேன்" எனத் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.