Skip to main content

“நூறாண்டு கால எம்.எல்.ஏ.க்களில் மிக மோசமான...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

dmk mkstalin speech at virudhunagar district


விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்று, உரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பெயரை உச்சரிக்காமலேயே, ஒரு பிடிபிடித்தார். மேலும் அவர் பேசியதில், “இந்தத் தொகுதியில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரைச் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். பஃபூன் மந்திரி என்று சொல்வதா? பலூன் மந்திரி என்று சொல்வதா? அவர் பெயரை நான் சொல்ல மாட்டேன். பெயரைச் சொல்லும் அளவுக்கு அவர் அவ்வளவு தகுதி படைத்தவர் அல்ல. அமைச்சராக இருக்கிறார். தமிழ்நாட்டில் 1920- ஆம் ஆண்டில் இருந்து தேர்தல் நடக்கிறது. அதாவது, கடந்த 100 ஆண்டுகளாக எத்தனையோ தேர்தல்கள் நடந்துள்ளன. இத்தனை தேர்தல்களிலும் வென்றவர்களில் மிக மோசமான அடிமுட்டாள் யார் என்றால், அவர் தான்.

 

இதைப் போன்ற தலைகுனிவு தமிழகத்துக்கு இதுவரை வரவும் இல்லை. இனி வரவும் கூடாது. அவர் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். என்னை ஒருமையில் பேசுகிறார். அசிங்கமாகப் பேசுகிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தகுதியான ஒருவர் விமர்சித்தால்,  அதைப் பற்றி கவலைப்படலாம். அதற்கு மதித்து பதில் சொல்லலாம். தரம் கெட்டவர்களிலும்,  கேடுகெட்ட ஒருவருக்குப் பதில் சொல்வது எனக்கு அவமானம்.

 

அவர் பெயரைச் சொன்னால் எனக்கு இழுக்கு. அவர் பெயரைச் சொன்னால் இந்த மேடைக்கு இழுக்கு. அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இழுக்கு. அதனால், அவர் பெயரைச் சொல்லவில்லை. இந்தத் தேர்தலில் அவர் படுதோல்வியடைவார். அதுதான் நடக்கப்போகிறது. நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்.
 

dmk mkstalin speech at virudhunagar district


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில், அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விரைவில் தீர்ப்பு என்று அறிவித்துள்ளார்கள் நீதிபதிகள்.

 

நீதிமன்றத் தீர்ப்பு என்னவாக வரப்போகிறது என்று எனக்குத் தெரியாது. மக்கள் தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பது நன்றாகத் தெரிகிறது. ஊரை அடித்து உலையில் போட்ட அ.தி.மு.க. அமைச்சர்களை சிறைக்கும்- ஊருக்கு உழைக்கும் தி.மு.க.வை கோட்டைக்கும் அனுப்பும் தேர்தல் தான் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்” என்று அ.தி.மு.க. ஆட்சியையும், குறிப்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியையும் கடுமையாகத் தாக்கினார்.

 

இந்தப் பரப்புரையின்போது, ‘விருதுநகர் மாவட்ட பிரச்சனைகளை விளக்கும் குறும்படம்’ என்ற பெயரில் குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில், ராஜேந்திரபாலாஜியின் சிவகாசி தொகுதியை மட்டுமே குறிவைத்து, அத்தொகுதியில் நிலவும் சுகாதாரக் கேடு, சேதமடைந்த சாலைகள், குடிநீர்த் தட்டுப்பாடு, வாறுகால் வசதி போன்றவை இல்லையென்று, பொதுமக்கள் குற்றம்சாட்டும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மேலும், சிவகாசி தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான ரயில்வே மேம்பாலத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பதையும், அக்குறும்படம் சுட்டிக்காட்டியது. 

 

தொடர்ந்து தன்னைக் கடுமையாக விமர்சித்துவரும் ராஜேந்திரபாலாஜி மீதான மு.க.ஸ்டாலினின் கோபமும், சிவகாசி தொகுதியில் அவரைத் தோற்கடித்தே ஆகவேண்டும் என்ற தி.மு.க.வினரின் ஆவேசமும், இந்த விருதுநகர் மாவட்ட பரப்புரையில், அப்பட்டமாக வெளிப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.