Skip to main content

என்னை கேட்காம எப்படி உதவி செய்யலாம்... எப்ப தேர்தல் வந்தாலும் எனக்கு சீட் வேணும்... தி.மு.க.-வில் நடக்கும் உட்கட்சி அரசியல்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

dmk

 

சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என்பது இப்போது வரை சந்தேகமாக இருந்தாலும், அரசியல் வாதிகளின் காய் நகர்த்தல்கள் ஓயவில்லை.

 

வேலூர் மாவட்ட தி.மு.க.வை சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு, மத்திய, மேற்கு என பிரித்த போது, மேற்கு மா.செவாக தேவராஜ் நியமனம் செய்யப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டு தலைமையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜோலார்பேட்டை முத்தமிழ்ச்செல்வி நியமனம் செய்யப்பட்டார். அவரை மாற்றிவிட்டு தங்களில் யாராவது ஒருவரை நியமனம் செய்ய வேண்டுமென மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி, திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி, முன்னால் எம்.எல்.ஏ சூர்யகுமார் என பலரும் முட்டிமோதினர். துரைமுருகனின் சிபாரிசு மீண்டும் தேவராஜ் பக்கமே இருந்தது. தேவராஜை மீண்டும் நியமிக்கக்கூடாது என பல நிர்வாகிகளும் தலைமைக்கு மனு அனுப்பினர். அந்த மனுக்களை ஒதுக்கிவிட்டு சில மாதங்களுக்கு முன்பு தேவராஜ் மீண்டும் மாவட்ட பொறுப்பாளராக்கப்பட்டார். அதன்பிறகு என்ன நிலை என்று கேட்டால், கட்சிக்குள் உள்ளடி கரோனா புகுந்துவிட்டது என்கின்றனர் உடன்பிறப்புகள்.


கட்சி ரீதியாக வேலூர் மேற்கு மாவட்டம் எனச் சொல்லப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கான சீட்டை மீண்டும் பெற்றுவிட வேண்டுமென சிட்டிங் எம்.எல்.ஏ நல்லதம்பி, தி.மு.க. ந.செ ராஜேந்திரன், மாணவரணி மோகன் போன்றவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ஜோலார்பேட்டையை வாங்கிட கடந்த தேர்தலில் அமைச்சர் வீரமணியை எதிர்த்து உட்கட்சி சதியால் தோல்வியைச் சந்தித்த கவிதா முயற்சி செய்யகிறார். வாணியம்பாடி தொகுதியை வாங்கிவிட மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் முயற்சி செய்கிறார். ஆம்பூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ வில்வநாதன் உள்ளார்.

 

மற்ற தொகுதிகளைவிட ஆம்பூர் தொகுதியைக் குறிவைத்துத்தான் போட்டி பலமாக உள்ளது. அந்தத் தொகுதியை முதலில் அணைக்கட்டு எம்.எல்.ஏவாக உள்ள மத்திய மா.செ நந்தகுமார் பணிகளைத் தொடங்கினார். மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் ஆம்பூர் சென்றதும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். ஆம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போதே பேரணாம்பட்டு ஒ.செ. வில்வநாதன், மாதனூர் ஒ.செ சுரேஷ்குமார், திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பியின் அண்ணன் மாவட்ட பொருளாளராகவுள்ள அண்ணா.அருணகிரி போன்றவர்கள் மோதினார்கள். ஆனால் வில்வநாதன் ஜெயிச்சிட்டார். 2021 தேர்தலில் இந்த ஆம்பூரை வாங்கிவிட அண்ணா.அருணகிரி, சுரேஷ்குமார், தொழிலதிபர் சரவணன் உட்பட சிலர் முயற்சி செய்கிறார்கள். அதற்காக தொகுதியில் கரோனா கால நலத்திட்ட உதவிகளை வழங்குறாங்க. இதில் தொகுதி எம்.எல்.ஏவான வில்வநாதனை அழைக்காமலே அவர் ஒ.செ.வாக உள்ள பேரணாம்பட்டு ஒன்றியத்துக்குள் அண்ணா.அருணகிரி போய், கரோனா நலத்திட்ட உதவிகள் தந்தார். அதேபோல் ஆம்பூர் தொகுதிக்குள் வரும் மாதனூர் ஒன்றியத்தில் எம்.எல்.ஏ.-வைப் புறக்கணிப்பது போல் செயல்படுகிறார் சுரேஷ்குமார். இதுதான் மாவட்ட கமிட்டி கூட்டத்தில் வெடிச்சது.

 

dmk

 

கடந்த மே மாத இறுதியில் மாவட்ட கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், "என்னை கேட்காமல் என் ஒன்றியத்தில் எப்படி மாவட்ட பொருளாளர் வந்து உதவி செய்யலாம்'' எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல் மாதனூர் ஒ.செ. சுரேஷ்குமார், "என் ஒன்றியத்தில் நான் உதவிகள் செய்துகிட்டு இருக்கும்போது சம்மந்தமேயில்லாமல் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு நிர்வாகிகள் வந்து, என்னிடம் தகவல் சொல்லாம, என் ஒன்றியத்தில் உள்ள அணி அமைப்பாளர்களை வைத்து எப்படி உதவி செய்யலாம்'' என மாவட்ட பொறுப்பாளரைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார். இதனால் மாவட்ட கமிட்டி கூட்டம் காரசாரமானது, இதுப்பற்றி தலைமைக்கும் புகார் போய்வுள்ளது என்றார்கள்.

 

ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதனிடம் நாம் கேட்டபோது, "என் ஒன்றியத்திற்குச் சம்மந்தமேயில்லாத கட்சி நிர்வாகிகள் வந்து என்னிடம் கூட சொல்லாமல் உதவி செய்ததைத்தான் கேள்வி எழுப்பினேன், கட்சிக்கென ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதனால் கேள்வியாக எழுப்பினேன்'' என்றார். மாவட்ட பொருளாளர் அண்ணா.அருணகிரியிடம் நாம் கேட்டபோது, "மாவட்ட கமிட்டி கூட்டம் என்பது எங்கள் கட்சி சம்மந்தப்பட்ட விவகாரம் அதுப்பற்றி நான் வெளியே பேச விரும்பவில்லை'' என்றார்.

 

http://onelink.to/nknapp

 

இவர்கள் இப்படி அடித்துக்கொண்டு, உள்ளடி வேலை பார்த்ததால் தான் கடந்த முறை தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் ஏறுவதில் கோட்டைவிட்டது என்கிறார்கள் கட்சியின் விசுவாசிகள். இப்போதே கோஷ்டி சண்டையைத் துவங்கிவிட்டார்கள், தலைமை தலையிடவில்லையென்றால் கடந்த தேர்தலைப் போல் வரும் தேர்தல் எப்போது நடந்தாலும், கட்சியின் வெற்றியை உள்ளடிகள் காலை வாரிவிடும் என்பதே கள நிலவரம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.