Skip to main content

''திமுக தொட்டுவிட்டார்கள்; இதற்கு முடிவுரை நாங்கள் எழுதப் போகிறோம்'' - அண்ணாமலை பேட்டி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

"DMK has touched but we are going to write the conclusion to this" - Annamalai interview

 

"கடிகாரத்திற்கான பில்லை கேட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது; இதுவரை பில் வரவில்லை; இன்று சாயங்காலத்திற்குள்ளாவது பில் வருமா?" என அண்ணாமலை குறித்த கேள்விக்கு இன்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து இருந்தார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ''பில் கேட்கிறவர்கள் எல்லாம் யாரு? நான் பில் கொடுக்கிறேன் ஏப்ரல் முதல் வாரத்தில் பில் மட்டுமல்ல எல்லாமே கொடுக்கிறோம். ஊழல்வாதிகள், மக்களுடைய பணத்தில் சம்பளம் வாங்குகிறவர்கள், எம்எல்ஏவாக மாசாமாசம் பணம் வருகிறது. இவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள். கேள்வி கேட்கக்கூடிய உரிமை மக்களுக்கு இருக்கிறது. இன்றைக்குத்தான் 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண மனிதனைப் பார்த்து ஆட்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்கிறார்கள். எம்ஜிஆரை பார்த்தும் கேள்வி கேட்டார்கள். நாமெல்லாம் எம்ஜிஆர்க்கு நக தூசாக இருக்கக்கூடிய சாதாரண மனிதர்கள்.

 

இன்னைக்கு இரண்டாவது முறையாக சாமானிய மனிதனைப் பார்த்து ஆளுங்கட்சி கேட்கிறது. பில் மட்டும் இல்ல பில்லைத் தாண்டி எல்லாமே கொடுக்கிறோம். திமுக முதலமைச்சர் குடும்பம், ஒரு 13 அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்துள்ளோம். இப்பொழுதே கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாய் தொடுகிறது. இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல், காலேஜ், இந்தோனேசியாவில் இருக்கக்கூடிய போர்ட், முதல்வர் குடும்பத்தில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அவர்களுக்கு துபாய், லண்டனில் இருக்கக்கூடிய கம்பெனிகள்.

 

திமுக தொட்டுவிட்டார்கள் ஆனால் இதற்கு முடிவுரை நாங்கள் எழுதப் போகிறோம். இதில் செந்தில் பாலாஜி இருக்கிறார். கரூரில் 650 ஏக்கர், சாராய ஆலையில் இருக்கக்கூடிய பங்கு, சுப்ரீம் கோர்ட்டில் அவருடைய கேசுக்கு ஒவ்வொரு முறையும் ஆஜராகும் வக்கீலுக்கு ஒரு நாள் ஃபீஸ் ஒரு சாமானிய மனிதன் பத்து வருடம் சம்பாதிக்கிற காசு.  2ஜி ஊழல் எப்படி திமுகவிற்கு முடிவுரை எழுதி வீசப்பட்டதோ நாங்கள் கேட்கக்கூடிய ஒவ்வொரு கேள்வி இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பதில் வேணும். மக்களுக்கு ஒரு டோல் ஃப்ரீ நம்பரும் வெப்சைட்டும் கொடுக்கப் போகிறோம். நீங்கள் திமுகவிற்கு பினாமி சொத்து எங்காவது இருக்கிறது என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் அதை ரிஜிஸ்டர் பண்ணலாம். மக்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுக்கப் போகிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.