Skip to main content

திமுக பொதுக்குழு! துணைப் பொதுச்செயலாளர்களில் மாற்றம்!

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

DMK General Committee! Change in deputy general secretaries!

 

திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். கடந்த 6 மாதங்களாக நடந்த திமுகவின் உள்கட்சித் தேர்தல் 99 சதவீதம் நடந்து முடிந்து விட்டது. இனி, திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான தேர்தல் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. 

 

தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் மு.க.ஸ்டாலின். அதற்கான மனுத்தாக்கலை 7-ந் தேதி காலையில் தாக்கல் செய்கிறார். திமுகவின் சட்ட விதிகளின் படி மு.க.ஸ்டாலினின் மனு முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது.  பொதுச்செயலாளர், பொருளாளருக்குரிய மனுக்களும் ரெடியாகின்றன. 

 

மேற்கண்ட பதவிகளுக்கு போட்டியிருக்காது என்பதால் போட்டியின்றி அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார். இதன் மூலம், இரண்டாவது முறையாக தலைவராகிறார் ஸ்டாலின். குறிப்பாக, முதலமைச்சராக பொறுப்பில் இருக்கும் போது ஸ்டாலின் தலைவராவதால் திமுகவினர் மிக கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். தலைவர் உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வருகிற 9-ந் தேதி நடக்கவிருக்கும் திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் இதற்காக ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு  நியமனம் நடக்கும்.

 

அந்த வகையில், துணைப் பொதுச்செயலாளர்கள் நியமன விதிகளில் மாற்றம் கொண்டு வர கட்சி மேலிடம் திட்டமிட்டிருப்பதாக திமுக சீனியர்களிடம் எதிரொலிக்கிறது. குறிப்பாக, திமுகவின் தற்போதைய சட்டவிதிகளின் படி, 5 துணைப் பொதுச்செயலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 7-ஆக உயர்த்த திட்டமிடப்படப்பட்டுள்ளது.

 

இது குறித்து திமுகவில் நாம் விசாரித்தபோது, “திமுக சட்டவிதிகளின் படி 5 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் மகளிராகவும், ஒருவர் தாழ்த்தப்பட்டோர் இனத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். மற்ற மூவரும் பொது கேட்டகிரியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும். அந்த வகையில், தற்போது, 5 துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய 5 பேர் இருக்கிறார்கள். இவர்களில் அந்தியூர் செல்வராஜ் தலித் பிரதிநிதித்துவத்திலும், சுப்புலட்சுமி ஜெகதீசன் மகளின் பிரதிநிதித்துவத்திலும் நியமிக்கப்பட்டவர்கள்.

 

மற்ற மூவரும் பொது கேட்டகிரியில் நியமிக்கப்பட்டாலும், ஆ.ராசா, தாழ்த்தப்பட்டோர் சமூகம் என்பதால் அவரை அந்த சமூகத்தினராகவே பார்க்கப் படுகிறார். அதாவது, 5 துணைப் பொதுச்செயலாளர்களில் தலித் சமூகத்துக்கு 2 பிரதிநிதித்துவமா? மற்ற சாதியினருக்கு என்ன வாய்ப்பு? என்றெல்லாம் சீனியர்களிடம் தொடர்ச்சியான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், மற்ற சமூகத்தினரை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை 7 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படலாம்” என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சீனியர்கள்.

 

துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், அதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்று மேலும் நாம் விசாரித்தபோது, “தற்போது இருக்கும் 5 துணைப் பொதுச்செயலாளர்களில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அந்த  இடத்துக்கு ஒரு மகளிரை நியமிக்க வேண்டும். அந்த வகையில், அந்த இடத்துக்கு கனிமொழி மற்றும் கீதா ஜீவன் ஆகியோரிடையே போட்டி இருக்கிறது. இதைத் தவிர மேலும் சில மகளிர் வி.வி.ஐ.பி.க்களும் முயற்சியில் இருக்கிறார்கள். 

 

மகளிர் பிரதிநிதித்துவத்தை அடுத்து மற்ற 4 துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் தற்போது இருப்பவர்களே மீண்டும் நியமிக்கப்படுவார்கள். அதே சமயம், சுப்புலட்சுமி ஜெகதீசன் கொங்கு வேளாளர் என்பதால் அந்த சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று பேச்சு எழுந்தது. அப்படி கொடுத்தால், வன்னியர் சமூகம், நாயுடு சமூகம் உள்ளிட்டவர்களிடம் அதிருப்தி உருவாகலாம். அதனால், கொங்கு வேளாளர் சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் போல, வன்னியர் மற்றும் நாயுடு இனத்துக்கும் பிரதிநிதித்துவம் வழங்கலாம் என யோசிக்கிறார்கள். 

 

அந்த வகையில், “துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 5-லிருந்து 7 ஆக உயர்த்தும் பட்சத்தில், கொங்கு வேளாளர் சமூகத்துக்கு 1 இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு சக்கரபாணி, சாமிநாதன் இடையே போட்டி உருவாகியிருக்கிறது. மீதமுள்ள 1 இடத்தை வன்னியருக்கு கொடுத்தால் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கும், நாயுடு சமூகத்துக்கு கொடுத்தால் அமைச்சர் எ.வ.வேலுக்கும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள் திமுகவின் மேலிடத்தோடு தொடர்புடையவர்கள்.  

 

துணைப் பொதுச்செயலாளர்கள் மட்டுமல்லாமல் துணை அமைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆலோசித்து வருகிறது திமுக தலைமை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.