Skip to main content

வேல்யாத்திரை: நாடகம் நடத்தும் அதிமுக – பாஜக... குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்

Published on 17/11/2020 | Edited on 17/11/2020
DMK Complaint against BJP's Vel Yatra and ADMk

 

பா.ஜ.க. தமிழக தலைவர் முருகன், தமிழர் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு தரிசனம் செல்லும் வகையில் வேல்யாத்திரை நடத்தவுள்ளதாக அறிவித்தார். நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி முடியும் வகையில் பயண திட்டம் அறிவிக்கப்பட்டது.

 

இது வேல்யாத்திரையல்ல, அரசியல் யாத்திரை. இந்த யாத்திரை மூலம் தமிழகத்தில் மத மோதல் ஏற்படுத்த துடிக்கிறார்கள் என பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இதனால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, கரோனாவை காரணம் காட்டி அனுமதி தரவில்லை.

 

அனுமதி வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது பாஜக, அனுமதி தரக்கூடாது என சிலர் மனு தாக்கல் செய்தனர். இரண்டு மனுக்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறியது நீதிமன்றம். தமிழக காவல்துறை, அனுமதி வழங்க முடியாது எனச்சொல்லியது.

 

இந்நிலையில் திட்டமிட்டபடி காவல்துறை அனுமதியில்லாமல் கடந்த நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில், பாஜக தலைவர் முருகன் வேல்யாத்திரையை தொடங்க, கைது செய்யப்பட்டு, ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்து, பின்னர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விடுவித்தனர். தினம் ஒரு முக்கிய நகரத்தில் வேல்யாத்திரை நடத்த முயல அங்கு கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவது வழக்கமாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வேல்யாத்திரைக்கு விடுமுறை அளித்திருந்தது பாஜக.

 

நீங்கள் வேல் யாத்திரை நடத்துங்கள், நாங்கள் கைது செய்வது போல் கைது செய்து விடுவிக்கிறோம், மீண்டும் மறுநாள் அதேபோல் யாத்தரை நடத்துங்கள், கைது செய்து பின் மாலை விடுவிக்கிறோம் என தமிழகத்தை ஆளும் அதிமுகவும் – பாஜகவும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளார்கள் என எதிர்கட்சிகள் பலவும் குற்றம் சாட்டுகின்றன. அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போலவே தமிழக காவல்துறையும் – தமிழக பாஜகவும் நடந்துக்கொள்கின்றன.

 

நவம்பர் 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை நகரில் இருந்து பாஜக தலைவர் முருகன், வேல்யாத்திரை நடத்துவதாக கூறியுள்ளார். அதற்காக நகரம் முழுவதும் பாஜகவினர் போஸ்டர் ஒட்டி, கொடிகள் நட்டுள்ளனர்.

 

DMK Complaint against BJP's Vel Yatra and ADMk


இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று 17.11.2020 ம் தேதி திருவண்ணாமலையில் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்த  இருக்கும் வேல் யாத்திரையில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் நாகராஜன் ஐ.பி.எஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் காமினி, ஐ.பி.எஸ் மேற்பார்வையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், 12 துணை காவல் கண்காணிப்பாளர்கள், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் உட்பட மொத்தம் 1,195 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என அறிவித்துள்ளனர்.

 

வேல் யாத்திரைக்கு அரசாங்கமோ, காவல்துறையோ அனுமதி தரவில்லை. மத்திய – மாநில அரசுகளின் கரோனா கால விதிமுறைகளின்படி, மத, அரசியல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. அப்படியிருக்க திருவண்ணாமலையில் பாஜக வேல் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், முன்கூட்டியே கைது செய்ய முகாந்திரம் இருந்தும் அதனை செய்யாமல் 1,000த்திற்கும் மேற்பட்ட போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வேல்யாத்திரை தொடங்கி சிறிது தூரம் சென்றபின் கைது செய்வோம் என்பதை பொதுமக்களும் நாடகமாகவே காண்கிறார்கள்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய எதிர்கட்சியினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.