Skip to main content

''என்ன சம்பந்தம் பேசவா வராங்க; ரெய்டுனா என்னன்னு காவல்துறைக்கு தெரியாதா?'' - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

Published on 28/05/2023 | Edited on 29/05/2023

 

NN

 

தென்காசி ஆலங்குளம் பகுதியில் நடைபெறும் கனிம வளக் கொள்ளையை எதிர்த்து தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழகத்தில் நிச்சயமாக கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டிய விஷயம். தினம்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்குக் கனிமவளம் கடத்தப்படுவதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கேரளாவில் இருந்து ஒரு லாரியாவது கனிம வளத்தை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் வருமா? கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள், கோழி கழிவுகள், மருத்துவக் கழிவுகளையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து தமிழகத்தை குப்பைக்காடாக மாற்றக்கூடிய பொருட்கள் மட்டும் கேரளாவில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுது தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பைக்கூலமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது'' என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று சோதனை நடக்கிறது. காவல்துறையினர் கொஞ்சம் கூட வாய் கூசாமல் சொல்கிறார்கள்' எங்களுக்கு சொல்லவே இல்லை; தகவல் கொடுக்கவில்லை; தகவல் கொடுத்திருந்தால் நாங்கள் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்திருப்போம்' என்று சொல்கிறார்கள். ரெய்டு என்றால்  சாதாரண மனிதனுக்கு கூட தெரியும். யாருக்கும் சொல்லாமல் திடீரென வருவதற்கு பெயர்தான் ரெய்டு. இவர்கள் என்ன சம்பந்தம் பேச வருகிறார்களா அல்லது டின்னருக்கு வராங்களா தகவல் கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு வருவதற்கு. அப்படி வந்தால் அதற்கு பெயர் ரெய்டா. இது கூட காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? அப்பொழுது எந்த அளவிற்கு தமிழக அரசிற்கு காவல்துறை கைப்பாவையாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது'' என்றார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக தலைவர் குணமடைய முடிகாணிக்கை செலுத்திய தொண்டர்கள்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Volunteers who paid tribute for the DMk leaders recovery

 

சிதம்பரம் கீழத்தெருமாரியம்மன் கோயிலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய தேமுதிக கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள்  மற்றும் தொண்டர்கள் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் பாலு, மாவட்டத்துணைச்செயலாளர் பானுசந்தர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். தொண்டர்கள் சம்பத், ராஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் முடிகாணிக்கை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கருவறையில் பூஜை நடைபெறும்போது தொண்டர்கள் கையில் விஜயகாந்த் படத்தை வைத்துக்கொண்டு மனமுறுகி வேண்டினார்கள்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“தேர்தலில் நத்தம் தொகுதியில் மட்டும் 2 லட்சம் ஓட்டுகள் வாங்க வேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

2 lakh votes should be bought Natham constituency alone elections says Minister sakkarapani

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

 

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் சாணார்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி வரவேற்றார். எம்.பி.வேலுச்சாமி, முன்னாள் எம்எல்ஏ ஆண்டியம்பலம், மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

 

கூட்டத்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். குறிப்பாக நத்தம் சட்ட மன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்து ஐயாயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தார். இதற்கு நீங்கள் தான் காரணம். கடந்த முறை நாம் எதிர்க் கட்சியாக இருந்தோம். ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாடு முதல்வர் கடந்த 30 மாதங்களில் செயல்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா டவுன்பஸ், பள்ளிகளில் காலை உணவு திட்டம், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வீடு வீடாக சென்று எடுத்துக் கூறி வருகிற பாராளுமன்றத்தில் வாக்காளர் மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். 

 

நத்தம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அரசு கல்லூரி, புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், அமராவதி, காவேரி, ஆற்றின் உபரி நீர்மூலம் குளங்களை நிரப்பும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நத்தம்  சட்டமன்ற தொகுதியில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளில் 2 லட்சம் வாக்குகள் திமுக பெற வேண்டும். இதற்கான பணியை உடனடியாக நீங்கள் தொடர வேண்டும்” என்று கூறினார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்