Skip to main content

“தி.மு.க. வென்றதும் ஒ.பி.எஸ். சொத்துகள் அரசுடைமை ஆக்கப்படும்!” - தங்க தமிழ்ச்செல்வன்!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

“Deputy Chief Minister O.P.S. Assets will be made government property. ”- Thangathamilselvan


தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளரான கூடலூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் அருண்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு ரூ.2 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக மலையாள பத்திரிகையில் செய்தி வந்ததை வைத்துக்கொண்டு,  தங்க தமிழ்ச்செல்வன் அவதூறு பரப்பிவருகிறார். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒருமுறை எம்.பி.யாகவும் இருந்த தங்க தமிழ்ச்செல்வன், சென்னையில் வீடு, கம்பத்தில் வீடு, கடைகள் உட்பட சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். அதோடு மேகமலையில் அவருக்கு சொத்து இருந்தது, அதை என் பெயரில் எழுதி வைத்திருந்தார். நான், அ.தி.மு.க.வுக்கு வந்தபோது அதை அவருடன் இருக்கும் வேறு ஒரு நபருக்கு பவர் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். இப்படி தங்க தமிழ்செல்வனுக்கு ரூ.100 கோடி வரை சொத்துகள் இருக்கிறது. அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதனால் ஓ.பி.எஸ். மேல் அவதூறு பரப்புவதை இனிமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அதிரடியாகக் கூறியிருந்தார்.

 

இந்த குற்றச்சாட்டுக்களைப் பற்றி திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, “துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் தொகுதியான போடியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், அந்த ரூ.2 ஆயிரம்  கோடி சொத்து விவரங்களைப் பேசினேன். அதற்கு ஓ.பி.எஸ். எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதுபோல் தேனி மாவட்டத்தில் மட்டும் பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து இருக்கிறார்.


ஓடிக்கொண்டிருந்த ஆலைகளை மூடவைத்து அந்த ஆலைகளை எல்லாம் பினாமிகள் பெயரில் வாங்கி இருக்கிறார். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார், தனி விமானம் மூலம் மொரிஸியஸ், மாலத்தீவு நாட்டுக்குச் சென்று கொள்ளையடித்த பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார் என்றும் சொன்னேன் அதற்கும் பதில் சொல்லவில்லை. அதேபோல் லட்சுமிபுரம் கிணறு பிரச்சனையின்போது ஆயிரம் ஏக்கர் வாங்கி இருக்கிறார் என்று சொன்னேன். ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜாவும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஸ்கூல் உள்பட 10 ஆயிரம் ஏக்கருக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். இப்படி ஓ.பி.எஸ். குடும்பமே சொத்துகளை வளைத்துப் போட்டிருக்கிறது. இது எதற்குமே ஓ.பி.எஸ். எந்த ஒரு பதிலும் இதுவரை சொல்லவில்லை.

 

“Deputy Chief Minister O.P.S. Assets will be made government property. ”- Thangathamilselvan

 

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார். அதன் மூலம் ஓ.பி.எஸ். சொத்துகள் அனைத்தும் அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் ஓ.பி.எஸ். படு தோல்வியைத் தழுவுவார். 

 

கூடலூரைச் சேர்ந்த அருண்குமார், எனக்கு நெருங்கிய நண்பர். தே.மு.தி.க.வில் கூடலூர் சேர்மனாக வெற்றிபெற்றவரை ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் சேர்த்ததே நான்தான். அதன்பின் அ.ம.மு.க.விற்கு நான் போனபோது என்னுடன் வந்தவர், தி.மு.க.வுக்கு நான் வந்தபோது, அவர் ஓ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். பதவிக்காக என்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருகிறார். அது முற்றிலும் பொய். என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், ஓ.பி.எஸ். தூண்டுதலின்பேரில், எனது நண்பர் அருண்குமார் பேசியதற்கு சட்ட ரீதியாக தலைமையின் அனுமதியோடு வழக்குத் தொடர இருக்கிறேன்” என்று கூறினார்.  
     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.