Skip to main content

தந்தைக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மகள்..!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

Daughter involved in campaign asking for support for father

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதியில் ஆறாவது முறையாக முன்னாள் அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். 

 

கடந்த 16ஆம் தேதி ஆத்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த ஐ.பெரியசாமி, தொடர்ந்து தொகுதிகளில் பிரச்சாரக் களத்தில் ஈடுபட்டு வருகிறார். அதுபோல் அவருக்கு ஆதரவாக அவருடைய மகள் இந்திரா, ஆத்தூர் தொகுதியிலுள்ள சின்னாளப்பட்டியில் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

வாக்கு சேகரிப்பின்போது, “உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள், எனது தந்தையை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்” என்று கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியின் துண்டறிக்கையைக் கொடுத்து வாக்கு சேகரித்தார். மேலும் வள்ளுவர் நகருக்குச் சென்ற இந்திராவுக்கு அப்பகுதியில் இருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

 

இதைத்தொடர்ந்து லட்சுமிபுரம், கோடங்கிப்பட்டி, ஆத்தூர் உட்பட பல பகுதிகளிலும் தந்தைக்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் தனது தந்தையின் வெற்றிக்காக இந்திரா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்