Skip to main content

வழக்கிலிருந்து விடுதலை... உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கு.வாஞ்சிநாதன்

Published on 19/10/2020 | Edited on 19/10/2020
ddd

 

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசின் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக சிறப்பு கூட்டம் 18.2.2017 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். இதனால் சபாநாயகர் உத்தரவின்பேரில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கைது செய்யப்பட்ட மு.க. ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி கடலூர் மாவட்ட திமுக முன்னாள் மாணவர் அணி அமைப்பாளர், திமுக தலைமை கழக பேச்சாளருமான கு.வாஞ்சிநாதன் தலைமையில், 18.2.2017 அன்று மாலை 4 மணி அளவில் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கல்லூரி பிற்பட்டோர் நல விடுதி அருகே 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். போராடிய மாணவர்களை போலீசார் கைது செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று விட்டு வீட்டிலிருந்து திமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த கு.வாஞ்சிநாதனை வழிமறித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

 

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாகவும், பொதுமக்களை அசிங்கமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தமிழ்நாடு அரசு பொது சொத்துக்கள் சேதம், தடுப்பு சட்டம் போன்ற சட்டத்தின் கீழ் கு.வாஞ்சிநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

 

கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண், 2 நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கு.வாஞசிநாதன் பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 25 நாட்கள் சிறைச்சாலையிலிருந்து நிபந்தனை ஜாமினில் வெளி வந்தார். இரண்டு வருடங்களுக்கு மேலாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் 5.10.2020 அன்று நடந்தது.

 

இவ்வழக்கு தொடர்பாக கு.வாஞ்சிநாதன் ஆஜரானார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மீண்டும் 8.10.2020 அன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். அன்று ஆஜரான பின் 9.10.2020 குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வழக்கு 12.10.2020 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டு, தீர்ப்பில் இருந்து கு.வாஞ்சிநாதன் விடுதலை செய்யப்பட்டார்.

 

அதனையொட்டி சென்னையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் கு.வாஞ்சிநாதன்தான் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.