Skip to main content

மனித கழிவுகளை அகற்றும் ரோபோக்கள்! கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு! 

Published on 12/08/2020 | Edited on 12/08/2020


                      

Robots

 

 

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தும் முதன்மை மாநகரமாக கோவை உள்ளது என, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் பாராட்டியுள்ளது.

 

தமிழ்நாட்டின் தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அண்மையில் நிறைவுற்ற கோவை உக்கடம் பெரியகுளக்கரை நவீனபூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, கோவை மாநகராட்சிக்கு பாராட்டு தெரிவித்தார். இதை தொடர்ந்து கோவை மாநகரில் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை எந்திரம் மூலம் அகற்றுவதற்காக ரோபோக்களை பயன்படுத்தும்  முறையை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ’’பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி அடைப்புகளை அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், இப்பணியில் ரோபோக்களை பயன்படுத்தும் திட்டம் அனைத்து மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்படும். கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 5 மண்டலங்களிலும் தலா இரண்டு ரோபோக்கள் வீதம், மொத்தம் 10 ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன’’ என்றார்.

 

இதனையறிந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை எந்திரம் மூலம் அகற்றுவதற்காக ரோபோக்களை பயன்படுத்தும் முறையை செயல்படுத்தியுள்ள கோவை மாநகராட்சியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ட்விட்டர் வழியாக  பாராட்டியுள்ளது. 

 

மனிதர்கள் மூலம் சாக்கடை கழிவுகளை அகற்றும் முறையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலும் கோவை மாநகராட்சி ரோபோக்களை (Robotic Machines- Bandicoot V2.0) பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களின் செயல்பாடுகள் இல்லாத வகையில், உருவாக்கப்பட்ட இந்த ரோபோ (The bandicoot Robot), மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டது என்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை  குறிப்பிட்டுள்ளது.

 

இந்த ரோபோக்கள் பயன்படுத்தும் திட்டம் மற்ற நகரங்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் என்றும் இத்திட்டத்தை பின்பற்றி, தூய்மைப் பணியாளர்களின் வேலைகளை மேம்படுத்தி, பாதாள சாக்கடை குழிக்குள்  மனிதர்கள்  இறங்கி அடைப்புகளை அகற்றும் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

 

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் பாராட்டை பெற்ற கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துகளையும், கோவையை மற்ற நகரங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக முன்னிலைப்படுத்திய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு தனது நன்றியையும் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. மேலும், இந்த திட்டத்தை (பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்ற ரோபோக்கள் பயன்படுத்துதல்) தமிழகத்தின் மற்ற மாநகராட்சிகளிலும் செயல்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

 

"முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனது வைத்தால் அனைத்து மாநகராட்சிகளிலும் கழிவுகளை அகற்ற ரோபோக்களின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்தி, மனித கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தும் அவலங்களை அகற்ற முடியும்" என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.