Skip to main content

கரோனா தவறுகள்! "எடப்பாடி அரசுக்கு எதிராக வழக்குப் போடப்படும்!" -மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

mk stalin

   
திமுகவினருடன் அடிக்கடி விவாதிப்பதைக் கடந்து தமிழக அரசியல் நடவடிக்கைகளை காணொலி காட்சி மூலம் முன்னெடுத்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பத்திரிகையாளர்களை இன்று ஜூம் செயலி வழியாகச் சந்தித்தார். கரோனா பரவல் அதிகரித்து வரும்  நெருக்கடியான இந்தக் காலக்கட்டத்தில் கரோனா பரவல் குறித்து பத்திரிகையாளர்களுடன் விவாதிக்கவே இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தது திமுக! 
 

                    
இந்தச் சந்திப்பில் நக்கீரன் உள்பட பல்வேறு அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் கலந்துகொண்டன. முதலில் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவது, பிறகு, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளிப்பது என்பதாக தீர்மானிக்கப்பட்டது. நேரடி பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்பது போல இந்தச் சந்திப்பை நடத்துவது சிரமம் என்றும், அதனால், பத்திரிகையாளர்கள் தாங்கள் கேட்கும் கேள்விகளை சாட் வழியாக அனுப்பி வைக்கும்படியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காண்ஸ்டைன் ரவீந்திரன் கேட்டுக் கொண்டார். 
                     
அதன்படி, நாம் (நக்கீரன்) உட்பட பத்திரிகையாளர்கள் பலரும் கரோனாவை மையப்படுத்தி  பல கேள்விகளை அனுப்பி வைத்தோம். 
                    
காலை 11 மணிக்கு சந்திப்பைத் துவக்கிய மு.க.ஸ்டாலின், சுமார் 45 நிமிடங்கள் பேசினார். கரோனா காலம் துவங்கியதிலிருந்து மக்கள் படும் அவஸ்தைகள், முதல்வர் எடப்பாடி அரசின் தவறுகள், ஆட்சி அதிகாரத்தில் நடக்கும் மோதல்கள், பரிசோதனை குளறுபடிகள், ஊழல்கள், சமூகப் பரவலாக மாறியுள்ள கரோனா தொற்று, மரணம் உள்பட ஆட்சியாளர்களால் மறைக்கப்படும் உண்மைகள் என பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின். இது குறித்து வெளிப்படையான பதில்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அது குறித்து நீதிமன்றத்தில் திமுக வழக்குப் போடும் என எச்சரித்து தனது பேச்சை நிறைவு செய்தார் ஸ்டாலின். 
               

mk stalin

 


இதனையடுத்து, பத்திரிகையாளர்கள் அனுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின், ஓரிரு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுச் சந்திப்பை முடித்துக்கொண்டார். இதனால் பத்திரிகையாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. 

ஸ்டாலினிடம் சில முக்கியக் கேள்விகள் கேட்க வேண்டும் என காணொலி காட்சி வழியாகவே, காண்ஸ்டைன் ரவிந்திரனிடம் நாம் கேட்டபோது, ‘’அடுத்த சந்திப்பில் அவருடன் கேள்வி கேட்பது போல அமைக்கப்படும்‘’ என்றார். அதேபோல, பெண் பத்திரிகையாளர் ஒருவரும் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்ப, அவருக்கும் அதே பதில் தரப்பட்டது. காணொலி காட்சி வழியான பத்திரிகையாளர் சந்திப்பின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.