Skip to main content

போராட்ட எதிரொலி! முறையாக வழங்கப்பட்ட கூலி! 

Published on 16/06/2020 | Edited on 16/06/2020
rupees 2000 500


திமுக மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி எச்சரிக்கையால் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு கூலி  முறையாக வழங்கப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் அமரர் சஞ்சய் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம், அறிஞர் அண்ணா நகர் கூட்டுறவு சங்கம், கமலா நேரு அஞ்சுகம் மாபோல் சிலம்பு செல்வர் சித்தயங்கோட்டை காந்திஜி நம் நாடு நெசவாளர் சங்கம் உட்பட எட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.


ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் இன்று வரை சுமார் 70 நாட்களாக சின்னாளபட்டியில் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் மற்றும் பால்வளம் வழங்காததால் அவர்கள் வறுமையில் வாடி வந்தனர். சின்னாளபட்டி கைத்தறி நெசவாளர்கள் மாநில துணை பொதுச் செயலாளர் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ பெரியசாமியிடம் தங்களுக்கு முறையான கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.


அதைத்தொடர்ந்து ஐ.பெரியசாமி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு சேலை நெய்ததற்காக வழங்கப்பட வேண்டிய கூலித் தொகையை நிறுத்தி  வைத்திருப்பதை கண்டித்தும் கூட்டுறவு சங்கங்கள் முறையாக நெசவாளர்களுக்கு நூல் மற்றும் பாவுகள் வழங்குவதை வழங்காததை கண்டித்து அறிக்கை வெளியிட்ட தோடு கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததோடு கூட்டுறவு சங்கங்கள் முன்பு திமுக  போராட்டம் நடத்தப்படும் என அதிரடியாக அறிவித்தார்.

அதையடுத்து உடனடியாக சின்னாளபட்டியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள் கடந்த 70 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி தொகை யை உடனடியாக வழங்கினார்கள். குறிப்பாக கமலா நேரு அஞ்சு கம்.ம.பொ. சிலம்பு செல்வர் ஆகிய கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கூலியாக பெற்றன. இப்படி நிறுத்தி வைக்கப்பட்ட நெசவாளர்களின் கூலித் தொகை கிடைத்ததைக் கண்டு ஐ.பெரியசாமிக்கு ஒட்டு மொத்த நெசவாளர்களும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.