Skip to main content

உண்ணாவிரதத்தை முடித்தார் விஷ்ணு பிரசாத் எம்.பி.!

Published on 13/03/2021 | Edited on 14/03/2021

 

congress leader vishnu prasad mp


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு தர எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், எம்.பி.யுமான விஷ்ணு பிரசாத் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர், கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (13/03/2021) காலை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு தெரிவித்து மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையிலான கட்சியினரும், அதே அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், விஜயதரணி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் எம்.எல்.ஏ. சீட் தரக்கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினரும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். இதனால் சத்தியமூர்த்தி பவனில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

congress leader vishnu prasad mp

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு பிரசாத் எம்.பி.க்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் மாணிக்தாகூர், விஷ்ணு பிரசாத்தின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். 

 

இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஷ்ணு பிரசாத் எம்.பி.யை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி  சந்தித்துப் பேசினார். அவரிடம் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தை விஷ்ணு பிரசாத் எம்.பி. முடித்துக் கொண்டார். 

congress leader vishnu prasad mp

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விஷ்ணு பிரசாத் எம்.பி., "எனது கருத்துகளை மேலிடத்திற்குத் தெரிவிப்பதாக தமிழக தலைவர்கள் கூறியுள்ளனர். எனது கோரிக்கைகள் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது" என்றார். 

 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "எம்.பி. விஷ்ணு பிரசாத்தின் கருத்துகள் தலைமையிடம் சொல்லப்பட்டுள்ளது; தலைமை பரிசீலிக்கும்" எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆளுநர் வெளியேற வேண்டியவர் அல்ல வெளியேற்றப்பட வேண்டியவர்” - கே.எஸ். அழகிரி

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

KS Alagiri criticized tamilnadu governor

 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39வது நினைவு நாளான நேற்று (31-10-23) இந்தியா முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

 

அப்போது அவர், “மாநில அரசாங்கம் அதன் எல்லைகளுக்கு உட்பட்டு தான் கடன் வாங்குகிறது. அது மாநில அரசுகளின் உரிமை. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்ததை விட இப்போது ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு ஏராளமாக கடன் வாங்கியுள்ளது. மத்திய அரசுக்கு கடன் வாங்குகின்ற உரிமை உள்ளது என்றால் தமிழக அரசுக்கு கடன் வாங்கும் உரிமை இல்லையா? தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தவறான கருத்துக்களை மக்கள் நிராகரித்து விடுவார்கள். 

 

தமிழக ஆளுநர் மாநில அரசை சந்திக்க பயப்படுகிறார், குறை சொல்கிறார், விமர்சிக்கிறார். அவருக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், தமிழக அரசு செயலாளரையோ அல்லது  போலீஸ் டி.ஜி.பி.யையோ அழைத்து அவர்களிடம் அவரது கருத்துக்களை கூறலாம். அதை விட்டுவிட்டு பத்திரிகையாளர்களையும், பா.ஜ.க.வையும் நம்பி இருக்கிறார். எல்லா விதமான அடிப்படை முரண்பாடுகளுக்கும் அவர் மட்டும் தான் பொறுப்பு. தமிழக ஆளுநர் வெளியேற வேண்டியவர் அல்ல, வெளியேற்றப்பட வேண்டியவர்” என்று கூறினார்.

 

 

Next Story

“காகிதப்புலி...அவரால் உறுமக்கூட முடியாது” - கே.எஸ்.அழகிரி

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

"paper tiger.. He can't even growl" - KS Azhagiri

 

ஆளுநர் காகிதப் புலி என்றும் அவரால் உறுமக்கூட முடியாது என்றும் பேப்பரில் வேண்டுமானால் வரைந்து வைத்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “முதலில் வீராவேசமாக ஒன்றை பேசுகிறீர்கள். உங்களால் அதே நிலையில் இருக்க முடியவில்லை. மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறீர்கள். முதலில் அங்கீகரிக்க மாட்டேன் என சொன்னவர் மறுநாள் அங்கீகரிக்கிறார். நீங்கள் தோற்றுவிட்டீர்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 

 

மறுநாள் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்க முடியாது என்றார். நீங்கள் நீடிக்க வேண்டாம், நானே அரசாணை வெளியிட்டு நீட்டித்துக் கொள்கிறேன் என சொல்லி செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக முதலமைச்சர் நீட்டித்துவிட்டார். அது உங்களுக்கு இரண்டாவது தோல்வி.

 

இப்போது என்ன செய்துவிட்டீர்கள். அரசாணைக்குத் தடை விதித்துவிட்டீர்களா. என்ன செய்யமுடியும் அவரால். காகிதப்புலி அவர். உறுமக்கூட முடியாது. படம் வேண்டுமானால் வரைந்து வைத்துக்கொள்ளலாம். டெல்லியில் வெளிநாடுகளில் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனைகள், இந்தியாவைச் சர்வதேச அளவில் பதக்கம் பெற வைத்தவர்கள் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. மீது குற்றம் சுமத்தியுள்ளனர். அந்த பாலியல் குற்றத்திற்காக அவரை நள்ளிரவில் கைது செய்தீர்களா. பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவ்வளவு சட்டப் பாதுகாப்பு இருக்கிறது என சொன்னால் மாநில அரசின் அமைச்சருக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லையா” எனக் கூறினார்.