Skip to main content

லிங்காயத் சமூகம் பற்றி சித்தராமையாவின் பேச்சும், விளக்கமும்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

congress leader sitharamaiya talks about basavaraj bommai 

 

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சி அமைக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியுள்ளார்கள். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்தங்களைப் பெற முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நேரடியாக நாற்பது சதவீதம் கமிஷனை முதலமைச்சர் படத்துடன் கூடிய க்யூ ஆர் கோடுகளை அச்சிட்டு இதன் மூலம் கமிஷனை செலுத்துங்கள் என்று கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முன்னாள் முதலமைச்சர்  சித்தராமையாவிடம் செய்தியாளர் ஒருவர் பாஜகவில் லிங்காயத் சமூகத்தை சார்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பி இருந்தார்.  சித்தராமையா இது குறித்து பேசுகையில், "கர்நாடக மாநிலத்தில்  தற்போது லிங்காயத் சமூகத்தை சார்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக  உள்ளார். அந்த சமூகத்தை சார்ந்த முதலமைச்சர் தான் பல்வேறு ஊழல்களை செய்து கர்நாடகத்தின் பெயரை பாழாக்கிவிட்டார்" என தெரிவித்திருந்தார். இது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், "தன்னை மட்டும் ஊழல் வாதி என்று கூறி இழிவுபடுத்தாமல் தான் சார்ந்துள்ள சமூகத்தையே ஊழல் சமூகமாக விமர்சிப்பதாக  சித்தராமையா மீது குற்றம் சாட்டி உள்ளார்.

 

congress leader sitharamaiya talks about basavaraj bommai 

 

இந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதலமைச்சர்  சித்தராமையா பதிலளித்துப் பேசுகையில், "லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தலைவர்களான வீரேந்திர பாட்டீல், நிஜலிங்கப்பா போன்றோர் முதல்வர்களாக இருந்துள்ளனர். அவர்கள் நல்ல முறையில் ஆட்சி செய்தனர். நான் தற்போதுள்ள முதலமைச்சரின் ஊழல்களை மட்டுமே பேசி வருகிறேன். நான் எங்கும் அவர் சார்ந்த லிங்காயத் சமூகம் பற்றி பேசவில்லை. இந்த விவகாரத்தை பாஜகவினர் திரித்து கூறி வருகின்றனர். இதன் மூலம் பாஜகவினர் தேர்தலில் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். எனக்கு லிங்காயத் சமூகத்தின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. பசவராஜ் பொம்மை மட்டுமே ஊழல்வாதியாக திகழ்கிறார்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பச்சை மிளகாய் திருடர்களுக்கு கட்டி வைத்து தண்டனை! - ஒரு கிராமத்தின் ஆவேசம்!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Punishment for green chili thieves!

 

கர்நாடகாவில் பச்சை மிளகாய் திருடிய இரண்டு இளைஞர்களைப் பிடித்து, தர்ம அடி கொடுத்து, தூணில் கட்டி வைத்த கிராம மக்கள், கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.  

 

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளையும் பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு, அதிக விலையும் கிடைத்து வருவதால், விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்தப் பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வரும் நிலையில், லக்ஷ்மேஷ்வர் தாலுகாவில் உள்ள யட்டினஹள்ளி கிராமத்தில், விளை நிலங்களுக்குள் புகுந்து பச்சை மிளகாய் திருடிய இரண்டு இளைஞர்களை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்து,  தர்ம அடி கொடுத்ததுடன், தூணில் கட்டி வைத்து கடும் தண்டனை வழங்கியிருக்கின்றனர். 

 

Punishment for green chili thieves!

 

கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில், பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில்,  அவ்வப்போது அளவு குறைந்து காணாமல் போய் இருப்பது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்ததால், நிலங்களைக் கண்காணித்து காவல் காத்து வந்தனர்.

 

திடீரென அதிகாலை வேளையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சிவன் மற்றும் மஞ்சுநாத் ஆகிய இரண்டு இளைஞர்கள் விளை நிலங்களில் புகுந்து, செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களைப் பறித்துக்கொண்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு, திருடிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, காவலுக்கு இருந்த விவசாயிகளில் சிலர், அந்த இரண்டு இளைஞர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், அவர்கள் திருடிய மிளகாய்களுடன், இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். 

 

Punishment for green chili thieves!

 

இதனைத் தொடர்ந்து,  அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில், அவர்கள் திருடிய மிளகாய்களுடன், இரண்டு பேரில் ஒருவரைக் கட்டி வைத்து, மற்றொருவரை கட்டப்பட்டவனின் தோளில் மீது ஏற்றி நிறுத்திவைத்து, கடுமையாகத் தண்டித்துள்ளனர். இதன் பின்னர், இத்தகவல் அறிந்து அங்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து” - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

SC verdict for Cancellation of the case registered by the ed

 

கர்நாடகத்தைச் சேர்ந்த அலையன்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மதுகர் ஆங்குர் என்பவர் பல்கலைக்கழக சொத்துகளை முறைகேடாக விற்று ஆதாயம் அடைந்ததாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் மதுகர் ஆங்குர் முறைகேட்டில் ஈடுபட உடந்தையாக இருந்ததாக பல்கலைக்கழகத்தின் மற்றொரு முன்னாள் துணை வேந்தரான பாவனா திப்பூர் என்பவர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. அதுமட்டுமின்றி மதுகர் ஆங்குர் பணப்பரிவர்த்தனை செய்வதற்குத் தன் கணக்கை பயன்படுத்த பாவனா திப்பூர் அனுமதித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

 

அதனைத் தொடர்ந்து பி.எம்.எல்.ஏ. சட்ட வரம்புக்குள் வராத குற்றம் தொடர்பாகத் தன் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது தவறு எனக் கூறி பாவனா திப்பூர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து பாவனா திப்பூர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, பங்கஜ் மிட்டல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்ட வரம்பில் வராத குற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியாது. பி.எம்.எல்.ஏ. சட்ட வரம்புக்குள் வரும் குற்றச்செயல் மூலமாக முறைகேடாக பணப்பரிமாற்றம் நடந்திருந்தால்தான் அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியும்” எனக் கூறி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ஐபிசி 120 பி என்ற சட்டப் பிரிவின் கீழ் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்