Skip to main content

விவசாயிகளின் போராட்டத்தில் கோர்ட் தலையிடுவது சரியல்ல! - பாலகிருஷ்ணன்

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
communist leader balakrishnan raise voice for farmers

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல்லில் உள்ள கட்சிஅலுவலகத்திற்கு வருகை தந்து பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் பத்திரிகையாளரிடம் பேசிய மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்..மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இதில் 72 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மத்திய அரசு மனிதாபிமானமற்ற முறையில் விவசாயிகளை நடத்தியத்தோடு மட்டுமில்லாமல் சட்டத்தின் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தது, தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை தீர்வாகாது. கோர்ட் அமைத்துள்ள நான்கு பேர் கொண்ட குழுவில் வேளாண்மை சட்டங்களை ஆதரித்து பேசியவர்களே இடம்பெற்றுள்ளன.

 

போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை இதில் கோர்ட்டு தலையிடுவது சரியான அணுகுமுறை கிடையாது தற்போது பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துள்ளது மூலம் அரசுக்கு இரண்டு மாத தவணை கொடுத்தது போல் அமைந்துவிட்டது. தற்போது காலங்கடந்து பெய்து வரும் மழையினால் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

 

தமிழக அரசு சேதமடைந்த பயிர்களைக் கணக்கிட்டு ஒரு ஏக்கருக்கு 3,000 வழங்க வேண்டும். இதேபோல் மற்ற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையெனில் பொங்கலுக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்தும் பதவிக்காலம் முடிந்து பிரிவுசார விழா நடத்த வேண்டிய சமயத்தில் துணைவேந்தருக்கு பதவி நீடிப்பு வழங்கியுள்ளது உள்நோக்கத்தோடு ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே மூழ்கும் கப்பல் நிலையில்தான் உள்ளது தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக 2500 ரூபாய் மற்றும் இலவச டேட்டா கார்டு உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். இது இவர்களது வெற்றிக்கு ஒரு போதும் உதவாது. அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது, ஆனால் திமுக கூட்டணியில் எந்த ஒரு குழப்பமும் இல்லை வருகிற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.

 

 பத்திரிக்கையாளரின் சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம். மாநில குழு உறுப்பினர் தோழர் பாலபாரதி. பாண்டி உள்பட பல கட்சி தோழமைகள் உடன் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.