Skip to main content

வழக்கை மறைத்து தேர்தல் பிரச்சாரத்தில் பொய் சொன்ன முதல்வர் பழனிசாமி

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

 

Chief Minister who lied in the election campaign hiding the case


அதன்படி மார்ச் 28-ம் தேதி இரவு விதிகளை மீறி நகரத்தின் மையத்தில் மேடையமைத்து பொதுக்கூட்டம் நடத்தியது அதிமுக. இதில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி குற்றவாளி என திமுக குற்றம்சாட்டுகிறது. அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் விடுதலையானவர். 2ஜீ வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, நல்லவர், மக்களுக்கு நல்லது செய்வார் என்றவர், எங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா இறப்புக்கு நீதி கேட்கிறேன் என கிளம்பியுள்ளார் ஸ்டாலின். எங்கள் கட்சி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், உங்கள் வேலையை பாருங்கள் என்றார்.


வேட்பாளர் நல்லவர், அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று சொல்வதை அதிமுகவினர் பலர், ஒரு முதல்வர் பொய் சொல்லலாமா என புலம்புகின்றனர். இதுப்பற்றி நாம் பல்வேறு தரப்பினரிடம் பேசியபோது, கடந்த 2011-2016 காலக்கட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்தபோது, திருநெல்வேலியை சேர்ந்த வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமியிடம், புதியதாக வேலைக்கு சேருபவர்களிடம் ‘லஞ்சம் வாங்கி தா’ என நெருக்கடி தந்ததால் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது அப்போது பெரும் பிரச்சனையானதும், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது, அமைச்சர் பதவியில் இருந்து அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் சிறையில் இருந்து வெளியில் வந்தாலும், கட்சியில் இருந்து ஓரம் கட்டி வைக்கப்பட்டார். 

 


பிணையில் வெளியே வந்தவர், முத்துக்குமாரசாமி இறப்புக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்னை வழக்கில் இருந்து விடுவியுங்கள் எனச்சொல்லி வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், தமிழகரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க, அந்த வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்டார் என முதல்வரே சொல்வது வேதனையாக இருக்கிறது, இவர் ஒரு அரசு அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தை எதிர்கட்சிகள் மட்டும் பேசவில்லை, மக்களும் பேசுகிறார்கள், இதனை உளவுத்துறை மூலம் அறிந்தே நல்லவர் என சர்டிஃபிகேட் தருகிறார் என்றார்கள்.

 

கடந்த மாதம் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்புக்கு முதல்வர் எடப்பாடி வந்தபோது, குற்றவாளியின் இல்ல திருமணத்துக்கு வரக்கூடாது என கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜன் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு பெட்டிஷன் அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தமிழகரசே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதுவும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது செய்யப்பட்டது. அப்படியொரு முக்கிய வழக்கை மறைத்து பொதுமக்கள் முன்னால், முதல்வர் பொய் பேசுவது சரியா?. அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, தமிழகரசு என்ன முறையில் நடந்துகொள்ளும் என்பது இதன்மூலம் தெரிகிறது என அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நொந்துபோய் புலம்புகின்றனர்.


29-ம் தேதி கீழ்பென்னாத்தூர் உட்பட விழுப்புரத்துக்கு பிரச்சாரத்துக்கு சென்றார். திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தபோது, அதிமுக வேட்பாளர் குற்றமற்றவர் என்கிற பிரச்சாரத்தையே திரும்ப திரும்ப பொய்யை உதிர்த்தார் எடப்பாடி பழனிசாமி.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'விரைவில் விசாரிக்கும் நோக்கத்திற்காகத் தான் சிபிசிஐடி'-ஆர்.எஸ்.பாரதி பேட்டி

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
'CBCID is aiming to investigate quickly' - RS Bharati interview

அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ''2016-ல் 570 கோடி ரூபாய் நடு ரோட்டில் கண்டெய்னர் லாரியில் பணத்தை பிடித்து  இதுவரையில் ஏறத்தாழ 8 வருடம் ஆகிறது. இதனை சிபிஐ தான் விசாரிக்கிறது. நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்ட பொழுது சிபிஐ இன்வெஸ்டிகேஷன் கேட்கவில்லை. நீதிமன்றமே சிபிஐ விசாரணை கொடுத்தது.

டெல்லியில் நேரடியாக போய் சிபிஐ இடத்தில் கேட்டேன் ஆனால் எட்டு வருடம் ஆகிறது 570 கோடி ரூபாய் யாருடைய பணம் என்பதை இதுவரையில் சொல்லவும் இல்லை, அதற்கான எஃப்.ஐ.ஆரையும் சிபிஐ போடவில்லை. இப்படி பல வழக்குகள் தமிழ்நாட்டில் சிபிஐயில் நிலுவையில் இருக்கிறது. ஆகவே சிபிசிஐடி விசாரணை என்றால் துரிதமாக முடிக்க முடியும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் முதல்வர் கள்ளக்குறிச்சி சாராய மரணத்தை விசாரிப்பதற்காக சிபிசிஐடி விசாரணை மட்டுமல்ல, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டியையும்  அமைத்துள்ளார்.

ஆனால் எடப்பாடி 'சிபிஐ... சிபிஐ..'. என்று திருப்பி திருப்பி கேட்கிறார். கேட்டால் சிபிசிஐடி காவல் துறை மீது நம்பிக்கையே இல்லை என்று சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் வழக்கில் நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. நாங்கள் அன்றைக்கும் இன்றைக்கும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி ஸ்டே வாங்கி விட்டார். பிறகு 2022-ல் வழக்கு இறுதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஏற்கனவே விசாரித்தது சரியில்லை என்பதற்காக ஸ்டேட் போலீஸ் ஒரு விசாரணைக் குழு அமைத்து விசாரித்தார்கள்.

காவல்துறையின் சார்பாக விசாரித்து வந்த நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தது. நான் தனிப்பட்ட முறையில் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். அதனுடைய அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்றது. காவல்துறையும் அதனை விசாரிக்கும் காரணத்தினால் ஒரே வழக்கிற்கு இரண்டு பேர் தேவையில்லை என்று நான் அந்த மனுவை திரும்ப பெறுகிறேன் என்று சொன்னேன். இது ஒன்றும் புதிதாக நடைபெறவில்லை. 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது டான்சி வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான் தான் திமுக சார்பில் தொடர்ந்தேன். அதனுடைய வரலாறு உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். அந்த வழக்கை போட்டார் என்பதற்காக சண்முகசுந்தரம் 32 இடங்களில் வெட்டப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். காரணம் என்னவென்று கேட்டால் ஒரு அரசு ஊழியர் செய்ய முடியாத செயலை செய்தால் 169 சட்டப்பிரிவின்படி தண்டிக்கலாம். அந்த வழக்கை நாங்கள் தான் முதல்முறை சைதாப்பேட்டை கோர்ட்டில் போட்டபோது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜெயலலிதாவிற்கு சம்மன்  அனுப்பினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் போய் அதற்கு ஸ்டே கேட்டார். நீதிபதி ஸ்டே கொடுக்க மறுத்துவிட்டார். நீங்கள் கீழ் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த வேண்டும் ஸ்டே கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மறுத்தார். அதனால் என்னென்ன கஷ்டங்களை நீதிபதி அனுபவித்தார் என்பதெல்லாம் எல்லோருக்கும் நாட்டிற்கும் தெரியும்'' என்றார்.

Next Story

“பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Resign the post and let politics talk  E.P.S. Emphasis

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசுகையில், “சட்டப்பேரவை விதி 56இன் கீழ் பேரவையின் பிற நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக காலையே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை அளித்தோம். விதிப்படி வந்தால் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசலாம் என பேரவைத் தலைவர் சொன்னார். இருப்பினும். விதியை பின்பற்றி பேசினாலும் சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி தர மறுக்கிறார். சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை. பிரச்னையின் ஆழத்தை கருதி சபாநாயகர் அப்பாவு நேரம் கொடுத்திருக்க வேண்டும். 

Resign the post and let politics talk  E.P.S. Emphasis

கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது வேதனை அளிக்கிறது. கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து அவையில் எதிர்க்கட்சி பேசுவதை ஆளும்கட்சி விரும்பவில்லை. கள்ளக்குறிச்சி பிரச்னையை விட முக்கியமான பிரச்னை வேறு என்ன இருக்கிறது?. சட்டப்பேரவையில் ஒரே நாளில் 5 மானியக் கோரிக்கை மீது எப்படி விவாதம் நடத்த முடியும்?. சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்காக வெளியேறினோம் என சபாநாயகர் கூறுவது தவறு. மக்கள் பிரச்னைகளை மூடி மறைக்கவே சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு எனக் கூறுகின்றனர்.

கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார். எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம் என செயல்படுகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திமுக அரசு பேச வாக்கு அரசியல் தான் காரணம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக்கூடாது. வேண்டுமென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” எனத் தெரிவித்தார்.