![Chennai PMK Reservation](http://image.nakkheeran.in/cdn/farfuture/XS-7R6wQ8sakGKAsWCzZQPnnjwvjFJJiDwHZbgh4KOg/1606981859/sites/default/files/2020-12/th-2_6.jpg)
![Chennai PMK Reservation](http://image.nakkheeran.in/cdn/farfuture/P9hizvPogvGVohUKVk7Csyf9oHFfgKspap4WvKudaJ4/1606981859/sites/default/files/2020-12/th-3_2.jpg)
![Chennai PMK Reservation](http://image.nakkheeran.in/cdn/farfuture/QesIIMyslV1agha0W_YUYS-8mrw6sKPNSSsN-StvMtI/1606981859/sites/default/files/2020-12/th-1_6.jpg)
Published on 03/12/2020 | Edited on 03/12/2020
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் பா.ம.க சார்பில் 4 நாட்கள் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 1ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம், இன்று (03.12.2020) மூன்றாம் நாளாக, காலை 11.00 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போராட்டம், பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் போராட்டக்குழுத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது.