Skip to main content

ஒடிசா விபத்துக்கு காரணம்? புள்ளி விவரங்களை அடுக்கும் சு.வெங்கடேசன் எம்.பி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Cause of Odisha accident? M. P.  Su. Venkatesan also laid out the statistics

 

மதுரை நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு மற்றும் திட்டப்பணிகள் ஆய்வு முகாம் எம்.பி. சு.வெங்கடேசன் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல எண் 4 இல் குறைதீர்ப்பு முகாம் மற்றும் திட்டப்பணிகள் ஆய்வு நடந்தது. இந்நிகழ்வில் மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம் என நிர்வாக ரீதியிலான அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. சு.வெங்கடேசன், “ஒடிசா ரயில் விபத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. ஒடிசா விபத்துக்கு பிறகு நடக்கும் விபத்துகள் மட்டுமல்ல, இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்கும் சூழலை மத்திய அரசின் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவை நாம் பார்க்கிறோம். மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை ரயில்வே துறைக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் ரயில்வேயின் அனைத்து பிரச்சனைகளையும் நாம் அலசி ஆராய்ந்துள்ளோம். ஆனால் இப்போது ரயில்வேக்கென்று தனி பட்ஜெட் கிடையாது. பொது பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியின் குறியீடு மட்டும் தான் இருக்கும். அதன் பின் 10 நாட்களுக்கு பின் பிங்க் புத்தகம் வெளியிடப்படும். அந்த புத்தகத்தில் எந்த திட்டம், எவ்வளவு நிதி என அலசி ஆராய்வதற்குள் அந்த கூட்டத்தொடரே முடிந்திருக்கும். எனவே ரயில்வே துறையின் பல திட்டங்கள் பொதுப்பார்வைக்கு வராமலேயே இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

 

விமானத்துறையாக இருந்தாலும் சரி, ரயில்வே துறையாக இருந்தாலும் சரி, அவற்றின் மீது நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டிய விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை. அவை அனைத்தும் திரை மறைவுக்கு பின்னால் கொண்டு செல்லப்பட்டது. அதனுடைய விளைவுகள் தான் இது. இன்று எழுப்பப்படும் பல கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே துறையின் ஆலோசனை குழு கூட்டம் ரயில்வே அமைச்சரின் தலைமையில் நடந்தது. ஆலோசனை குழுவின் உறுப்பினர் நான். 13 ஆயிரம் இன்ஜின்கள் ரயில்வே துறையில் இயங்குகிறது. அதில் 65 இன்ஜின்களில் மட்டுமே கவாச் இயந்திரம் பொருத்தப்பட்டது என்பது அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம். இந்த ஒரு வருடத்தில் எத்தனை இன்ஜின்களில் பொருத்தியுள்ளீர்கள் என நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம். கேட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. இன்று வரை மத்திய அரசு எந்த பதிலும் வழங்கவில்லை” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடி அரசு” - சு.வெங்கடேசன் எம்.பி.

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Modi government has staged another injustice Su Venkatesan MP

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். அதே சமயம் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தி இருந்து. இந்த நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி இருந்தனர். மேலும் நன்னடத்தை குழுவின் இந்த பரிந்துரை அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவையில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார். 

Modi government has staged another injustice Su Venkatesan MP

இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் எதிர் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது எம்.பி. பதவியை பறித்ததன் மூலம் மற்றுமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. வன்மையான கண்டனம்” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

ஆளுநரின் விழாவை புறக்கணித்த பேராசிரியர்கள்! சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Professors boycotted the governor's ceremony! Greetings from Su Venkatesan MP

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்ளாத நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. இதனையேற்று பல்கலை. செனட் மற்றும் சிண்டிகேட் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவிட்டார்.

 

இதனிடையே, ஆளுநரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். இந்த நிலையில், மதுரை வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் செய்த 100 பேரை போலீசார் கைது செய்தனர். 

 

இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று காமராஜ் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பட்டங்களைப் பெற்றனர். அதே நேரத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுரேஷ் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர்  ஆளுநர் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர். 

 

Professors boycotted the governor's ceremony! Greetings from Su Venkatesan MP

 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.