Skip to main content

பா.ஜ.க மகளிரணி நிர்வாகி பாலியல் புகார்; சரி ரைட், ஓ.கே., கூல் டவுன், டேக் இட் ஈஸி... வைரலாகும் ஆடியோ!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

ddd

 

விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க மகளிரணி பொதுச் செயலாளர் காயத்ரி. இவர் தமிழக பா.ஜ.க தலைவருக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

அதில், நான் விழுப்புரம் மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளராக உள்ளேன். சமூக ஆர்வலர், கட்சிப் பணி என அயராது உழைத்து வருகிறேன். மாவட்ட தலைவர் வி.ஏ.டி கலிவரதன். இவர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்படும்போதே, எனக்குக் கட்சியில் மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கித் தருகிறேன், உன்னைப் பெரிய ஆளாக ஆக்குகிறேன் என்று நயவஞ்சகமாகப் பேசி, என்னிடம் சுமார் 5 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார். என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார். என்னைக் கட்சிப் பணி செய்யவிடாமல் தடுக்கிறார். என்னைப் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் உன்னை தீர்த்துக் கட்டிவிடுவேன் என்று கொலை மிரட்டலும் விட்டார். பெண்களை இழிவுபடுத்துகிறார். 

 

கலிவரதனால் என் குடும்பம் தற்போது நிர்க்கதியாய் உள்ளது. என்னைப் போன்ற பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார். எனவே புகார் செய்கிறேன். மாவட்ட தலைவர் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என் வாழ்க்கைக்குத் தீர்வு காணுமாறு கோருகிறேன். 

 

விசாரணை அமைக்கும் குழு, விழுப்புரம் மாவட்டத்தில் எங்கள் பகுதியில் விசாரணை செய்தால், பல உண்மைகள் வெளிவரும். விசாரணை செய்து எனக்கு நீதி கிடைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக, விளக்கம் கேட்க, கலிவரதன் செல்ஃபோன் நம்பருக்குத் தொடர்பு கொண்டோம். அவர் ஃபோனை எடுக்கவில்லை. 

 

இதனிடையே, விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் மற்றும் மகளிரணி நிர்வாகி பேசும் ஆடியோ, சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

 

cnc

 

மகளிரணி நிர்வாகி: என் வயிறு பத்தி எரியுது, நீ நாசமாப் போய்டுவ.

 

மாவட்ட தலைவர்: கம்முனு இரு, நீ என்னை திட்டுற வேலை வெச்சுக்காதே. சரி ரைட், ஓகே.., கூல் டவுன்.., டேக் இட் ஈஸி!. நான் வேற அழுதுடுவேன்டி. கொஞ்ச நாளைக்கு அமைதியா இரு, அது மாதிரி ஆள் நான் கிடையாது. அந்தக் காலம் எல்லாம் எப்பவோ மலையேறிப் போச்சு. இதுபோல இனிமேல் நடக்காது. உன் வேலையைப் பார். நீ நினைக்கறது எல்லாம் தெரியும். நான் யார் கூடயும் ஓடிட மாட்டேன். யார்கிட்டயும் போயிட மாட்டேன், கம்முனு விடு. இவ்வாறு செல்கிறது அந்த உரையாடல்...

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.