Skip to main content

தமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக!காங்கிரஸ்,திமுக அதிர்ச்சி!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

இந்தியா முழுவதும் இருக்கும் அதிருப்தி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 8 காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களில் 6 பேரை தங்கள் பக்கம் இழுத்து தமிழக காங்கிரஸை பலவீனப்படுத்தணும்னு பா.ஜ.க. கணக்குப் போடுது. இதன் மூலம் சட்டசபையில் தங்கள் குரலை எழுப்பலாம் என்பதோடு, அ.தி.மு.க. அமைச்சரவையிலும் பங்கெடுக்கலாம்ன்னு பா.ஜ.க. நினைக்கிறது. அதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களோடு டீலிங் பேசிட்டு இருக்காங்கனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அவங்களுக்கு அமைச்சர் பதவி வாங்கி தருகிறோம்னு ஆசை காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. 
 

bjp

 

congress mla




இதனால் இப்பவே மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. பக்கம் தாவ ரெடியாயிட்டாங்களாம். இன்னும் மூணு பேரை வளைச்சதும் பா.ஜ.க.வின் பவர் ஆட்டம் இங்க ஆரம்பிக்குமாம். இதற்காக ஆடிட்டர் குருமூர்த்தியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் ஜரூரா களமிறங்கி ரூட் போட்டுக்கிட்டு இருக்காங்களாம். இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்ட சபைக்குள் நுழைய முடியுமான்னு பா.ஜ.க. பகீரதப் பிரயத்தனங்கள்ல இறங்கியிருக்கு. பாஜகவின் இந்த திட்டத்தை கேட்ட காங்கிரஸ் மற்றும் திமுகவினர் சற்று அதிர்ச்சியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.