Skip to main content

திமுக எம்.பி.க்கள் 4 பேரையும்...அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும்...டார்கெட் செய்யும் பாஜக!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்ற அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நான்கு பேரின் பதவியை பறிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் பொதுநல வழக்கு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகளின் பிரமுகர்களான மதிமுக கணேசமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சின்ராஜ், இந்திய ஜன நாயகக் கட்சி பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார்கள். அதனால் இந்த இவர்களுடைய எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும் என்று ’தேசிய மக்கள் சக்தி பெயரில் கட்சி நடத்தும் ரவி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை போட்டுள்ளார். 

 

dmk



அதில் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள், மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது. அப்படி போட்டியிட்டால் அது சட்ட விரோதம் என்று கூறியுள்ளார்.  இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சனோ, இவர்களின் வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரிகள்தான் சரிபார்த்து ஏற்றுக் கொண்டார்கள். அது அவர்களின் சொந்த முடிவு என்று தெரிவித்துள்ளார். அதனால் இந்த வழக்கை தேர்தல் வழக்காக கருத வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே பொதுநல வழக்காகத் தாக்கல் செய்யப் பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எம்.சத்தியநாராயணா, என்.சேஷசாயி அமர்வோ, வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்து சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கும் தி.மு.க. தலைமைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


  admk



இது பற்றி ரவிக்குமார் எம்.பி.யிடம் நாம் கேட்டபோது, "தேர்தல் விதிமுறைப் படியே நாங்கள் நால்வரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறோம். எங்கள் மனுவிலோ, வெற்றியிலோ எந்தக் குளறுபடியும் இல்லை என்று கூறினார். மேலும் இது குறித்து திமுக சீனியர்கள் தரப்பில் கேட்டபோது, ரவிக்குமார் உட்பட இந்த நான்கு பேரும் முறைப்படி திமுகவில் உறுப்பினர் கார்டை பெற்று தான் தேர்தலிலே நின்றார்கள். இப்படியெல்லாம் வழக்கு வரும் என்று தெரிந்து தான் எங்கள் கட்சித் தலைமை முன்கூட்டியே கவனமாக செயல்பட்டது என்கிறார்கள். இந்த வழக்கில் அதிரடித் தீர்ப்பு வருமானால், அது சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி, நடிகர் கருணாஸ், தனியரசு ஆகியோருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று ஒரு சிலர் இப்போது கூறிவருகிறார்கள். ஆனால் அந்த மூவர் தரப்பில் கேட்ட போது, "எந்த தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை. இறுதி முடிவெடுக்க வேண்டியவர் சபாநாயகர் தான் என்று கூறிவருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.