Skip to main content

பாஜக அரசுக்கு ஜுரம் என்றால் அதிமுக அரசுக்கு ஜன்னியே கண்டதென்ன? தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி?

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

 


காலையில் பட்ஜெட் படிப்பு என்றால் மாலையில் இஸ்லாமியர்களை அடித்து உதைத்துப் பழிதீர்ப்பு! சிஏஏ எதிர்ப்பால் ஒன்றிய பாஜக அரசுக்கு ஜுரம் என்றால் அதிமுக அரசுக்கு ஜன்னியே கண்டதென்ன? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

எஞ்சிய ஓராண்டும் எப்படியெப்படி கமிஷன் பார்ப்பது என்ற கோணத்தில் ஓர் அதிசயப் பட்ஜெட்டை கோட்டையில் காலையில் படிக்கத் தொடங்கியது என்றால் அதைப் படித்து முடித்த கையோடு மாலையில் இஸ்லாமியர்கள் மீது போலீசை ஏவி வெறியாட்டம் ஆடியது அதிமுக அரசு.

 

 Velmurugan



இஸ்லாமியர்களைக் குறிவைத்து பாசிச குடியுரிமைத் திருத்த சட்டத்தைக் (சிஏஏ) கொண்டுவந்தது பாஜக மோடி அரசு என்றால், அதன் அடிமையாக இருப்பதுடன் அடியாளாகவும் மாறி எஜமான் கட்டளைப்படி இஸ்லாமியர்களைப் பழிதீர்க்கத் தொடங்கியிருக்கிறது அதிமுக பழனிசாமி அரசு.
 

அதனால்தான் நேற்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதல்லாமல் ஒவ்வொருவராகப் பிடித்து அடித்து உதைத்துத் துவம்சமே செய்திருக்கிறது.
 

சிஏஏவுக்கு எதிராக இந்தியா முழுவதுமே கிளர்ந்தெழுந்து போராட்டங்கள் நடைபெற்றுவருவதைப் பார்க்கிறோம். இதில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிஏஏ போராட்டக்காரர்களை குருவிகளைப் போல் சுட்டுத்தள்ளியதையும் கேள்விப்பட்டோம். அப்படியிருக்க, சென்னைக் கோட்டையில் உள்ள அதிமுக அரசு என்ன சும்மாவா இருந்துகொண்டிருக்கிறது என ஒன்றிய பாஜக அரசு நினைப்பதும் வினவுவதும் நமக்குப் புரியாமல் இல்லை. இதற்கான விடைதான் தமிழகத்திலும் இஸ்லாமியர்கள் மீது போலீசை ஏவி பாய்ந்து பிராண்டுவதாகும்.
 

சென்னை பழைய வண்ணார்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களுமாக இஸ்லாமியர்கள் திரண்டு நேற்று மாலை போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் போக்குவரத்துக்கு இடைஞ்சல், அதனால் போராட்டத்தைக் கைவிடுங்கள், கலைந்து செல்லுங்கள் என்று மிரட்டியது போலீஸ். போராட்டக்காரர்கள் மறுக்கவே வடசென்னை காவல்துறை இணை ஆணையர் தினகரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து போராட்டம் தொடர்ந்தபோது போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது ஒவ்வொருவராகப் பிடித்து போலீசார் அடித்து உதைத்ததாகத் தெரியவருகிறது. அத்துடன் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகிறது.
 

இதற்குக் கண்டனம் தெரிவித்து பெண்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் குழந்தைகள் உள்பட குடும்பமே போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


 

சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு தொடங்கிய சாலை மறியல் கிண்டி, ஆலந்தூர் போன்ற இடங்களிலும் தொடர்ந்தது.
 

கிண்டி, ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் சென்னை விமான நிலையம் செல்ல வேண்டியவர்கள் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும் செங்கல்பட்டு, கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையிலும் போராட்டம் நடந்ததால் அப்பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

அதோடு, போராட்டம் தமிழகமெங்கும் பரவியது. திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வந்தவாசி, திருச்சி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், பழனி. தேனி, நாகர்கோவில், கன்னியாகுமரி என தமிழகம் முழுவதிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

இதற்கிடையே கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் சார்பிலான இஸ்லாமியப் பிரதிநிதிகளுடன் மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 

சிஏஏவுக்கு எதிராக பல மாநில அரசுகள் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. நமக்குப் பக்கத்திலுள்ள புதுச்சேரி மாநில அரசும் சிஏஏ எதிர்ப்புத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனால் அண்ணா பெயரிலேயே கட்சியை வைத்துக்கொண்டிருக்கும் அதிமுகவோ பாமகவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு மாநிலங்களவையில் சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்ததால்தான் அந்த சிஏஏ மசோதாவே சட்டமானது. அப்படியிருக்க தன் எஜமானின் கட்டளைப்படி இஸ்லாமியர்களின் இடுப்பை ஒடிக்கின்ற பழிதீர்க்கும் படலத்தில் இறங்குவதல்லாமல் வேறென்ன செய்யும் அதிமுக?
 

அதனால்தான், காலையில் பட்ஜெட் படிப்பு என்றால் மாலையில் இஸ்லாமியர்களை அடித்து உதைத்துப் பழிதீர்ப்பு!
 

சிஏஏ எதிர்ப்பால் ஒன்றிய பாஜக அரசுக்கு ஜுரம் என்றால் அதிமுக அரசுக்கு ஜன்னியே கண்டதென்ன என்று கேள்வி எழுப்பி தனது கண்டனத்தை பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.