Skip to main content

பாராட்டிய அமித்ஷா; வசை பாடிய ஜெயக்குமார்! 

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

Annamalai statement and amith sha and jeyakkumar reaction

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை விசிட்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணி மற்றும் மக்களவைத் தேர்தலில் தொகுதி எண்ணிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இதில் இன்னும் கொஞ்சம் மைலேஜ் ஏற்றும் விதத்தில் அண்ணாமலை தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் எனச் சொன்னது இன்னும் அதிமுக - பாஜக கூட்டணியில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறது. 

 

Annamalai statement and amith sha and jeyakkumar reaction

 

பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு மதிய உணவு முடித்துக்கொண்டு, மூத்த நிர்வாகிகளுடன் சில நிமிடங்கள் உரையாடினார். அப்போது அவர், “தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை பார்த்து உற்சாகம் அடைகின்றனர். திமுகவின் குடும்ப ஆட்சியை அகற்ற பாஜக தான் மாற்று என்பதை உணர்கின்றனர். தேர்தல் அரசியலுக்கு பூத் கமிட்டி அவசியம். அந்த கமிட்டி இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். பூத் கமிட்டி அளவில் அடிக்கடி கூட்டங்களை நடத்தி, அதில் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். மாநிலத் தலைவராக அண்ணாமலையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது” என்று பேசினார். 

 

Annamalai statement and amith sha and jeyakkumar reaction

 

அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “இதற்கு முன்பு இருந்த பாஜக தலைவர்கள் தோழமை உணர்வோடு, கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தனர். அண்ணாமலை, மாநிலத் தலைவருக்கு உரிய தகுதி இல்லாதவர். அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் கண்டிக்க வேண்டும். அதிமுக, பாஜக கூட்டணி தொடரக்கூடாது. பிரதமராக மோடி வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அண்ணாமலை செயல்கள் உள்ளன” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Amit Sh's trip to Tamil Nadu was suddenly canceled

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்த அமித்ஷா மதுரை மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் ரோட் ஷோ மற்றும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.