Skip to main content

ஓ.பி.எஸ்க்கு எதிரான மனநிலையில் அண்ணாமலை! - இடைத்தேர்தல் அக்கப்போர்!

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அதிமுக வேட்பாளர் தென்னரசு தாக்கல் செய்துவிட்ட நிலையில், ‘ஜனநாயகக் கூத்து நடந்திருக்கிறது’ என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.

 

அதிமுக பொதுக்குழு உறுப்பினரான தேனி மாவட்டம் – அரண்மனைபுதூரைச் சேர்ந்த சுப்புராஜ் நம்மிடம், “ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரா தென்னரசை தேர்வு செய்யுறது சம்பந்தமா கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பெயர்ல எனக்கு அனுப்பப்பட்ட 4-ஆம் தேதியிட்ட கடிதமும், வாக்குச் சீட்டும்  6-ஆம் தேதி இரவுதான் என் கைக்கு கிடைச்சது. அந்தக் கடிதத்துல 5-ஆம் தேதி இரவு 7 மணிக்குள்ள சென்னைல இருக்கிற அதிமுக தலைமைக்கழக அலுவலகத்துல வச்சு அவைத்தலைவர்கிட்ட கொடுக்கணும்னு குறிப்பிட்டிருந்தாங்க. அது எப்படி 6-ஆம் தேதி கைக்கு கிடைச்ச வாக்குச்சீட்டை 5-ஆம் தேதி இரவு கொடுக்கமுடியும்? இந்தக் கொடுமையை கட்சிக்காரங்க எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க. நாங்களும் சிரிச்சிட்டு அதிமுக கட்சியை எப்படியெல்லாம் நாசமாக்குறாங்கன்னு வருத்தப்பட்டுட்டு இருக்க வேண்டியதுதான்.

 

எனக்கு தெரிஞ்சு, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லிக்கு போற அவசரத்துல, லோக்கல்ல (சென்னை) இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள்கிட்ட வேணும்னா அஃபிடவிட்ல (ஒப்புதல் படிவங்கள்) கையெழுத்து வாங்கிருப்பாங்க. அதுவும் இங்லீஷ்ல இருந்த அஃபிடவிட்ல புரிஞ்சு கையெழுத்து போட்டாங்களோ, புரியாம கையெழுத்து போட்டாங்களோ? மத்தபடி, அவங்களுக்கு வேண்டிய பொதுக்குழு உறுப்பினர்கள்தானேன்னு, அஃபிடவிட்ல ஃபோர்ஜரி கையெழுத்து போட்டுத்தான் தேர்தல் ஆணையத்துல கொடுத்திருப்பாங்க. இது எடப்பாடி சர்க்கிள்ல இருந்தே எனக்கு கிடைச்ச தகவல்.  

 

இன்னொரு கொடுமையும் நடந்திருக்கு. கழக அவைத்தலைவர் அனுப்புன லெட்டர்ல, தென்னரசை முன்மொழிந்தார்ங்கிற இடத்துல எடப்பாடி K.பழனிசாமி-ன்னு பெயரை மட்டும் தான் போட்டிருந்தாங்க. இடைக்காலப் பொதுச்செயலாளருன்னோ, இணை ஒருங்கிணைப்பாளருன்னோ பெயருக்கு முன்னால போடல. சட்டத்த மதிக்கணும்கிற பயத்துலதான், தமிழ்மகன் உசேன் எடப்பாடி பழனிசாமி கட்சில என்ன பொறுப்புல இருக்காருங்கிறத போடல. ஆனா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை என்ன பண்ணிருக்காருன்னா.. அவரோட அறிக்கைல நன்றி சொல்லும்போது, இடைக்காலப் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமின்னு போட்டிருக்காரு. அதேநேரத்துல, பொறுப்பு எதையும் போடாம அண்ணன் ஓ.பன்னீர்செல்வம்னு போட்ருக்காரு. எந்த அளவுக்கு ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான மனநிலைல அண்ணாமலை இருக்காரு பாருங்க.” எனக் குமுறினார்.

 

‘ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் எதுக்காக பிரிஞ்சு நின்னு கோர்ட், கேஸுன்னு அலையணும்? இதெல்லாம் எந்த விதத்துலயும் கட்சிக்கு நல்லது இல்ல..’ என்று தீவிர அதிமுக தொண்டர்களும் புலம்பவே செய்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.