Skip to main content

“இரட்டை இலை சின்னம் முடக்கம்” - எம்.பி தேர்தலுக்கு ஸ்கெட்ச் போடும் பா.ஜ.க!

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Annamalai and Tamilnadu BJP members met Amith Sha for Parliament election

 

புதுச்சேரி யூனியன் பிரதேச நிகழ்ச்சிகளுக்காக கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாண்டிக்குச் செல்லும் வழியில் சென்னை ஆவடியில் ஓரிரவு (23-ந் தேதி) தங்கினார். அது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலர் கேசவவிநாயகம், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒன்றிய அமைச்சர் முருகன் ஆகியோரிடம் ஆலோசித்தார் அமித்ஷா. ஆலோசனை விவகாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

 

நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காக அடுத்த வருட துவக்கத்திலிருந்தே சில முடிவுகளை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டியதிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது. நாம் தனித்துப் போட்டியிடலாமா? இப்போதிருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? என்று 3 கேள்விகளை கேட்டிருக்கிறார் அமித்ஷா.

 

Annamalai and Tamilnadu BJP members met Amith Sha for Parliament election

 

அதற்கு அண்ணாமலை, "நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இப்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரலாம்'' எனச் சொல்ல, "அ.தி.மு.க.வுடன் கூட்டணின்னா அது பா.ஜ.க. தலைமையில் எப்படி அமையும்? அதற்கு அ.தி.மு.க. ஒப்புக்கொள்ளுமா?'' என சி.டி.ரவி கேட்க, "இப்போதைய அ.தி.மு.க. பலவீனமாக இருக்கிறது. அவர்களுக்கும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதனால், 50:50 சீட் ஷேரிங்கில் அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்'' என்றிருக்கிறார் அண்ணாமலை. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.தான் அண்ணாமலையின் சாய்ஸ். கேசவவிநாயகமோ, "தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்கணும்னா அ.தி.மு.க. வலிமையாகனும். ஆனா, அது அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் லாபம். தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க.வை தவிர்த்து ஒரு வலிமையான வேறு ஒரு கட்சி இங்கு இல்லை. இருந்தால் ஒருவேளை மக்களின் மனம் மாறலாம். அதனால் அ.தி.மு.க. பலவீனமாகி பா.ஜ.க. பலமாக தெரிந்தால் மட்டுமே தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகள் நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

 

இந்த சூழலில் பேசிய சுதாகர் ரெட்டி, "அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க. போட்டியிடும்போதுதான் கணிசமான வெற்றி கிடைக்கிறது. அதனால், தனித்துப் போட்டியிடலாம். அந்த முடிவை எடுத்தால், இரட்டை இலையை முடக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு பலமே அதன் சின்னம்தான். அ.தி.மு.க. பலவீனமாகிவிட்டால் பா.ஜ.க. பக்கம் மக்கள் திரும்ப வாய்ப்பிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

 

Annamalai and Tamilnadu BJP members met Amith Sha for Parliament election

 

இதனை உன்னிப்பாகக் கவனித்த அமித்ஷா, "இன்னும் ஆழமாக யோசிங்க. உங்கள் யோசனைகளை ஒரு ரிப்போர்ட்டாக கொடுங்கள்'' என்றிருக்கிறார். பின்னர் அமித்ஷாவை தனியாக சந்தித்து, தமிழக அரசின் சுகாதாரம், மின்சாரம், நெடுஞ்சாலை, இந்து சமய அறநிலை, தொழில், பத்திரப்பதிவு, நகராட்சி நிர்வாகம், கனிமவளம் உள்ளிட்ட துறைகளில் தி.மு.க.வுக்கு எதிராக தனக்கு கிடைத்த மெட்டீரியல் எவிடென்ஸ்களை அமித்ஷாவிடம் விவரித்திருக்கிறார் அண்ணாமலை. முதல்வர் குடும்ப நபர்களின் ஆதிக்கம் குறித்தும் பேசியிருக்கிறார்.

 

இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுக்கும் அசைன்மெண்ட்டை பா.ஜ.க.வும் சசிகலா தரப்பும் தனித்தனி ரூட்டில் தொடங்கிய பணிகள் தொய்வடைந்திருக்கிறது. இவர்களிடம் சிக்காத அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தி.மு.க.வின் வலையில் விழுந்துள்ளனர். அமைச்சர்கள் ஏ.வ.வேலு, செந்தில்பாலாஜி, சேகர்பாபு, அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிடியில் அந்த 22 எம்.எல்.ஏ.க்களும் இருப்பதாக தி.மு.க. தரப்பில் எதிரொலிக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.