Skip to main content

''பாட்டாளி மாடல்... 2026 ல் ஆட்சி... கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் இனி கூடாது''-கட்சியினரை எச்சரித்த அன்புமணி ராமதாஸ்!

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

pmk

 

சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். பேலஸில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (28/05/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இக்கூட்டத்தில், பா.ம.க.வின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை, ஜி.கே.மணி முன்மொழிய, பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். இதனால் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

 

pmk

 

இந்த நிகழ்வில் பேசிய அன்புமணி ராமதாஸ், ''என்னை பொருத்தவரை கட்சி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் நேர்மையான முறையில் நீங்கள் செயல்பட வேண்டும். இது என்னுடைய அன்புக் கட்டளையாக எடுத்துக் கொள்ளுங்கள். காரணம் நம்ம கட்சி மற்ற கட்சிகளை போல் கிடையாது. ஒரு வித்தியாசமான கட்சி. ஒரு மாறுபட்ட கட்சி. அப்படி யாராவது தவறுதலாக செயல்பட்டார்கள் என்றால் நிச்சயமாக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தாமதம் ஆகாது. ஏனென்றால் இதற்கு முன்பு எப்படி இருந்தீர்கள் என்று தெரியவே தெரியாது எனக்கு. இதன் பிறகு அனைத்து நிர்வாகிகளும் நேர்மையான முறையில் செயல்பட வேண்டும். 99 விழுக்காடு அல்ல நூறு விழுக்காடு எங்கேயுமே கட்ட பஞ்சாயத்து பிரச்சனை, ரவுடித்தனம் எதுவுமே இருக்கக்கூடாது.

 

ஒரு துளி அளவு கூட நம்ம கட்சியில் இருக்க கூடாது. தமிழ்நாட்டில் பல கட்சிகள் மக்களை பிரித்து அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்சிகள் எல்லாம் மக்களை ஜாதி அடிப்படையில், மத அடிப்படையில், இன அடிப்படையில், மொழி அடிப்படையில் பிரித்து பார்க்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்தான் மக்களை இணைத்து செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி என்ற அடித்தளத்தில் வைத்து செயல்பட்டு வருகிறது. நம்முடைய நோக்கம் தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சி. பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கொள்கை சமூகநீதி, சமத்துவம், நீடித்த வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம், விவசாயிகளுடைய முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தூய்மையான நிர்வாகம் இதுதான் நமது கட்சியினுடைய அடித்தள கொள்கை. அந்தக் கொள்கைகளை வைத்து தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறோம். நம் இயக்கத்திற்காக, தமிழக மக்களுக்காக நான் கடுமையாக உழைப்பேன். உங்கள் விருப்பப்படி 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி நடக்கும். அதற்கேற்ப நம்முடைய அரசியல் அணுகுமுறை வேறு விதமாக இருக்க 'பாட்டாளி மாடல்' வடிவமைத்துக் கொண்டிருக்கின்றோம்.

 

உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் ஜல்லிக்கட்டு காளையாக ஓடோடி வருவேன். அதற்கும் நான் தயங்க மாட்டேன். என்னை பற்றி உங்களுக்கு தெரியும். டீசன்ட் அண்ட் டெவலப்மெண்டல் பாலிடிக்ஸ் பேசுகின்ற இந்த அன்புமணி என்னுடைய தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு, சகோதர சகோதரிகளுக்கும் எந்த பிரச்சனை இருந்தாலும் அங்கே நிச்சயமாக நான் ஓடோடி வருவேன்'' என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.