Skip to main content

அமித்ஷா.. விஜய்.. நீட்.. செந்தில்பாலாஜி.. - ஆத்தூரில் என்ன பேசினார் இ.பி.எஸ். 

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

Amitsha.. Vijay.. NEET.. Senthilbalaji.. - What EPS talked Aathur
கோப்புப் படம்

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் இன்று மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. இதே திமுக 1999ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லையா. அதே ஆட்சிக் காலத்தில் திமுக எம்.பி.க்கள் பாஜக கூட்டணியில் அமைச்சரவையில் இடம் பெறவில்லையா. ஆகவே திமுக தான் காலத்திற்கு ஏற்றதுபோல், நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடிய கட்சி. 

 

கூட்டணி என்பது அனைத்து கட்சிகளும், தேர்தல் வரும்போது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவகையில், அமைக்கின்ற நிகழ்வு அது அவ்வளவுதான். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. அந்தவகையில் அதிமுகவுக்கும் கொள்கை இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். 

 

முதல்வர் ஸ்டாலின், ‘நாங்கள் மிசாவை பார்த்தவர்கள்’ என்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அவசரக்காலம் வந்தது. அதில் தான் மிசா வந்தது. அதில் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும், பதவிக்கும் திமுகவும், ஸ்டாலினும், அவரது குடும்பமும் காங்கிரஸுக்கு அடிமையாக இருந்துகொண்டிருக்கிறது. 

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எங்கள் நிர்வாகிகளும், கட்சியினரும் அரும்பணி ஆற்றிக்கொண்டிருக்கிறோம். அமித்ஷா அவரது கருத்தை தெரிவிக்கிறார்; அதுவேறு. எங்களின் கருத்து இதுதான். 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறும் சூழ்நிலை பிரகாசமாக இருக்கிறது. 

 

எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, ஊழல் புரிந்த அமைச்சர் இன்று கைதாகியுள்ள நிலையில், அவரை தொடர்ந்து அமைச்சராக வைத்திருப்பேன் என்று சொல்வது மிக தவறு. கடந்த கால வரலாற்றில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ஆலடி அருணா ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டபோது அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேபோல், என்.கே.கே.பி. ராஜா வழக்கில் சம்பந்தப்பட்டபோது அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது ஒரு வழக்கு வந்தது அவரும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

 

தமிழ்நாட்டிற்கு என்று ஒரு அரசியல் நாகரிகம் இருக்கிறது. அதனை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாடு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைப்பார்கள். இன்று சிறையில் இருப்பவர் அமைச்சராக இருந்தால் அது எப்படி சரியாக இருக்கும். எனவே இதனை ஒரு மோசமான உதாரணமாக பார்க்கிறோம். முதலமைச்சர் அரசியல் நாகரிகம் கருதி அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவிக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கிறார்கள்” என்றார். 

 

மேலும் செய்தியாளர்கள் அவரிடம், ‘விஜய் வாக்குக்கு பணம் பெற கூடாது என்கிறாரே அதனை எப்படி பார்க்கிறீர்கள்’ என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், “ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் விஜய் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்” என்றார். 

 

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், நீட் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்து தனியார் நாளிதழில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த இ.பி.எஸ். “நீட்டை எதிர்க்கிறோம். நீட் வரக்கூடாது என்பதில் முதன்மையாக இருக்கும் கட்சி அதிமுக. 2010ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி திமுகவும் காங்கிரஸும் கூட்டணியில் இருந்தபோது தான் நீட் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிடுகிறார்கள்.

 

இதற்கு பிள்ளையார் சுழி போட்டது திமுக காங்கிரஸ் கூட்டணி. ஆனால் நீட் தேர்வை எதிர்த்தது அதிமுக. நீதிமன்றத்திற்கும் சென்றோம். ஆனால் அதனை திமுக தலைவர் ஸ்டாலின் மறைக்கப்பார்க்கிறார். நீட் தேர்வைக் கொண்டுவந்தது திமுக காங்கிரஸ் கூட்டணி தான். ஆனால், நான் முதலமைச்சராக இருந்த போது நீட்டுக்கு தற்காலிக தீர்வாக அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தேன். அதேபோல், 7.5 சதவீதத்தில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணம் செலுத்தும் எனும் உத்தரவை பிறப்பித்தேன். அவர்களுக்கு உதவியது அதிமுக அரசு” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.