Skip to main content

தமிழக அரசிடமிருந்து தப்பிக்க இடம் மாறிய அமித்ஷா! பரபரப்பு பின்னணி! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

AmitSha Avadi visit secrete

 

அரசுமுறைப் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு செல்வதற்காக 23-ந்தேதி இரவு சென்னை வந்தார். அவரது வருகையின்போது நடந்துள்ள இரண்டு சம்பவங்கள்தான் மாநில உளவுத்துறையினரால் உற்று நோக்கப்பட்டிருக்கின்றன.

 

கவர்னர் மாளிகையில் தங்காமல் ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாளிகையில் அமித்ஷா தங்கினார். இது குறித்து மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரி பயணம் முடிவானதுமே, டெல்லியிலிருந்து பெங்களூர் சென்று அங்கிருந்தபடி சென்னைக்கு வராமல் புதுச்சேரிக்கு செல்லலாம் என்றுதான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பெங்களூர் பயணம் கட் ஆனது. காரணம், தமிழக அரசியல் சூழல், ஆட்சி சூழல் இரண்டையும் தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் விவாதிக்க நினைத்தார் அமித்ஷா. சென்னையில் முதல்நாள் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் புதுச்சேரி செல்ல தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் ராஜ்பவனில் அமித்ஷா தங்குவது எனவும், அன்றைய தினம் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் ஆலோசிக்கவும் முடிவானது.


இதனை அறிந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஒன்றிய உள்துறைக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளனர். அதில், ’தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலும், மாநில காவல்துறை மற்றும் மாநில உளவுத் துறையின் பாதுகாப்பு கண்காணிப்பிலும் சென்னை ராஜ்பவன் இருக்கிறது. அதனால் அமித்ஷாவை மாநில உளவுத்துறையின் மூலம் தமிழக அரசு வேவு பார்க்கலாம். ராஜ்பவனில் தங்குவதை தவிர்க்கவும்’ என தகவல் தந்துள்ளனர். அதன்பிறகே, ராஜ்பவனை தவிர்த்து விட்டு மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவடி சி.ஆர்.பி.எஃப். விருந்தினர் மாளிகையில் தங்குவது என முடிவானது” என்று ஆவடி ரகசியத்தை சுட்டிக்காட்டினார்கள்.


சென்னை விமானநிலையத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலரும் அமித்ஷாவை வரவேற்றனர். சால்வை கொடுத்த கராத்தே தியாகராஜனுடன் கையைப் பிடித்துக்கொண்டு அவர் பேசியதை சொன்ன விசயங்களை, உன்னிப்பாக கவனித்தார் அமித்ஷா.


இதனையடுத்து, அமித்ஷாவின் காரில் அண்ணாமலையும் சி.டி.ரவியும், அதற்கடுத்த காரில் கேசவ விநாயகம், அமைச்சர் முருகன், சுதாகர் ரெட்டியும் பயணித்தனர். ஆவடிக்கு சென்ற அமித்ஷா, விருந்தினர் மாளிகையில் மேற்கண்ட ஐவருடன் தி.மு.க. ஆட்சி குறித்து 2 மணி நேரம் விவாதித்துள்ளார். அப்போது தி.மு.க. அரசுக்கு எதிரான பல டாகுமெண்ட்டுகளை அமித் ஷாவிடம் காட்டி விவரித்திருக்கிறார் அண்ணாமலை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.