Skip to main content

எல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி!

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

சிறையில் இருக்கும் சசிகலா ஒருவித திட்டம் போட்டு வருவதாக தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன. சிறையில் தன்னை யார் சந்திக்க வந்தாலும் அவர்களிடம் மௌனம் சாதிக்கும் சசிகலா, சில முக்கிய சொந்த பந்தங்களிடம் மட்டும் தன் எதிர்கால வியூகங்கள் பற்றி உற்சாகமாகப் பேசுவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி நம்மிடம் மனம் திறந்து பேசிய மன்னார்குடித் தரப்பு, டிசம்பர் அல்லது ஜனவரியில் ரிலீஸ் ஆகிடுவோம் என்று சசிகலா அழுத்தமாக நம்புவதாக தெரிவிக்கின்றனர். அவர் விடுதலைக்கு கர்நாடகாவில் இருக்கும் எடியூரப்பா அரசும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக கூறுகின்றனர். அதனால் தனக்கு எதிராக அங்கே சிறை அதிகாரி ரூபா கிளப்பிய புகாரும் அது தொடர்பாக நடக்கும் விசாரணையும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறிவருவதாக சொல்லப்படுகிறது. 

 

admk



சிறையில் இருந்து வெளியே வந்ததும், அ.தி.மு.க.வி.லோ, அ.ம.மு.க.விலோ உடனடியாக  சேர்ந்து செயல்படாமல், தனித்து இயங்குவதற்காக புதுப்புது திட்டங்களை அவர் மனதிற்குள் போட்டு வருவதாகவும் கூறுகின்றனர். அதனால், எல்லோரும் என்னிடம் வரும் காலம் வரப்போகுது என்று சசிகலா மிகவும் நம்பிக்கையாக உள்ளார் என்று கூறுகின்றனர். இந்த தகவல் எடப்பாடிக்கும் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. சசிகலா வெளியில் வந்தால், பெரும்பாலான மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் அவர் பக்கம் சென்றுவிடுவார்கள் என்ற பயம் எடப்பாடிக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சின்னம்மா தியாகம் செய்துவிட்டுத்தான் சிறைக்கு சென்றுள்ளார். அவர் அ.தி.மு.க.வுக்குத் திரும்பி வந்து, கட்சியை வழிநடத்துவார் என்று அதிரடி கிளப்பியுள்ளார். உடனே அமைச்சர் ஜெயக்குமார், எந்தக் காலத்திலும் சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று அவருக்கு பதிலடி கொடுத்தார். 


இதனையடுத்து அமைச்சர்கள், சசிக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு அணியாக நின்று சலசலப்பை ஏற்படுத்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதை எல்லாம் நினைத்து வருத்தத்தில் இருக்கும் எடப்பாடி, சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதற்குள் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஓ.பி.எஸ். சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். அண்மைக் காலமாக ஓ.பி.எஸ் உடன் நெருக்கமாகக் கைகோத்திருக்கும் எடப்பாடி, தங்களின் பொது எதிரியாக சசிகலாவையும், அமைச்சர் வேலுமணியையும் கருதுவதாக கூறுகின்றனர். சசிகலாவைப் போலவே வேலுமணி, ஆட்சியைத் தந்திரமாகக் கைப்பற்ற முயற்சிப்பதாக எடப்பாடி நினைக்கிறார். அதற்கு காரணம், வேலுமணிக்கு தைரியம் கொடுத்துவரும் ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் தான் என்றும் கூறுகின்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.